பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 563


சூளாமணி

கருமாவை வெவ்வினைகள் காறளர நூறிக்
கடையிலாவிண் ஞானக்கதிர் விரித்தாயென்று
மருமாலைநன்னெறியை முன்பயந்தாயென்று
மடியே முன்னடி பரவுமா றறிவதல்லாற்
றிருமாலே தேனாரு மறவிந்த மேந்துந்
திருவணங்கு சேவடியாய் தேவாதிதேவ
பெருமானே நின்பெருமெய் நன்குணரமாட்டார்
பிணங்குவார் தம் மெய்வினைப் பிணக்கொழிக்கலாமே.

செங்கணெடு மாலை செறிந்திலங்குசோதித்
திருமுயங்குமூர்த்தியாய் செய்யதாமரையி
னங்கணடி வைத்தருளு மாதியா யாழி
யறவரசேயென்று நின்னடிபணிவதல்லா
லெங்கணிட றகலுமாறிந் நிலைமெய்யெய்தி
யிருளுலக நீக்கும் அருடருகநீயென்று
வெங்க ணிருளினையை யறவென்றாய் முன்னின்று
விண்ணப்பஞ்செய்யும் விழுத்தகமெயுண்டோ

சீவகசிந்தாமணி

மாட்டார்பூம் பிண்டிவளங்கெழுமுக்குடைக்கீழ்மாலே கண்டீர்
முட்டாத வின்பக் கதிதிறக்குந் தாளுடைய மூர்த்திபாதம்.

பின்கலை நிகண்டு

எண்ணிற் கண்ணுடையோன் வாமன் / யேற்ற புண்ணியத்தின் மூர்த்தி.

திரிக்குறள்

தாம்வீழ்வார் மென்றோட்டுயிலினினிதுகோ / றாமரைக்கண்ணோண் விழாக்கோல்கொள்கென.

மணிமேகலை

மாயிருஞாலத் தரகதலை யீண்டு / மாயிரங்கண்ணோன் விழாக்கோல்கொள்கென.

வீரசோழியம்

புத்தன் காரணப்பெயர் - கண்ணன் காரியப்பெயர் புத்தன், கண்ணனை உய்வித்தான்

என்புழிக் கருத்தா , கிரியைக்குக்கா / ரணமாய்நிற்றலிற் கார்ன கருத்தாவாயிற்று.

இத்தகைய மாலென்றும், திருமாலென்றும், செங்கநெடுமாலென்றும் வழங்கிய புத்தபிரானே உலகெங்கும் சுற்றி தன்ம சக்கிரமாம் அறவாழியை உருட்டி சங்கங்களை நிறப்பிவந்தபடியால் அவரையே உலகளந்தோனென்றும், சங்கசக்கிரத்தானென்றும் வழங்கிவந்தார்கள்.

சீவகசிந்தாமணி

ஒங்குமால்வரை வரையாடுழக்கவி / னுடைந்துகு பெருந்தேன்
றாங்குசந்தனத் தளரத்தழுவி / வீழ்வனதகைசா
லாங்கண்மா லுலகளந்தா / னாழி சங்கமோடேந்தி
தேங்கொண்மார்பிடைத் திளைக்குஞ் / செம்பொனார மொத்தனவே.

- 2:23, நவம்பர் 18, 1908 -

சங்கசக்கிரத்தான், அறவாழியான், உலகளந்தானென்றும் புத்தபிரானைக் கொண்டாடியதுமன்றி சகல மக்களினிதயங்களில் எண்ணும் எண்ணங்களை அறிந்து சொல்லுவதும் பலதேச சங்கதிகளை உள்ளுக்குள் அறிந்து போதிப்பதுமாகிய கியான திருஷ்டியின் செயலைக் கொண்டு உலகத்தையே உண்டு உமிழ்கின்றவர் என்றும் உலகுண்டோனென்றும் கொண்டாடி வந்தார்கள்.

சீவகசிந்தாமணி

முழங்குகடநெற்றி / முளைத்தெழுந்த சுடரேபோ
லழுங்கல் வினையலற நிமிர்ந் / தாங்குலக மூன்றும்
விழுங்கில் யுமிழாது குணம் / வித்தியிருந்தோய் நின்
னிழுங்கில் குணச் சேவடிக / ளேத்தித் தொழுதும் யாம்.

கடவுளென்றும், பிரமமென்றும், சிவனென்றும், தேவனென்றும்,