பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /565


இடைக்காட்டு சித்தர்

ஆதிபகவனையே பசுவேயன்பாய்துதிப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே சொந்தமதாகாதோ.

வீரசோழிய உதாரணச் செய்யுள்

தோடாரிலங்கு மலர்கோதிவண்டு வரிபாடு நீடு துணர்சேர்
வாடாதபோதி நெறிநீழன்மேய வரதன்பயந்த வறநூல்
கோடாதசீல விதமேலிவாய்மெய் குணனாக நாளுமுயல்வார்
வீடாதாவின்ப நெறிசேர்வர்துன்ப வினைசேர்த நாளுமிலரே.

சீவகசிந்தாமணி

வீங்கோதவண்ணன் விரைத்தும்புபூம்பிண்டித்
தேங்கோதமுக்குடைக்கீழ் தேவர்பெருமானைத்
தேவர்பெருமானைத் தேனார்மலர்சிதறி
நாவினவிற் பாதாம் வீட்டுலகநண்ணாரே.

இத்தகைய பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பத்திற்கு ஆளாகாது மரணத்தை ஜெயித்த யமகாதகன் எவனோ அவனையே யதார்த்தபிராமணன் எனப்படும்.

ஆதியந்தண அறவாழியான் துணை
முற்றும்.

- 2:24; நவம்பர் 25, 1908 -


11. மோசேயவர்களின் மார்க்கம்

மோசே என்பவர் கிறிஸ்துமார்க்கத்தைச் சார்ந்தவர் அவரை பிராமண ரென்று கூறலாமோ என்பர் வேஷபிராமண மார்க்கவகுப்பார்.

மோசே என்பவர் எங்கள் கிறிஸ்துமார்க்கத்தவராயிருக்க அவரை பிராமணரென்று கூறுவது அற்புதமே என்பார் அவர் மார்க்க வகுப்பார்.

பிராமணனென்பவன் பூணூலணைந்திருப்பான், குடிமிவைத்திருப்பான் என்னும் குறிப்பையும், அடையாளத்தையும் காட்டும் வேஷத்தை பிராமணரென்று ஏற்பவர்களுக்கு அச்சங்கை தோன்றுமேயன்றி எத்தேச எப்பாஷைக்காரனாயிருப்பினும் பிராமணனென்னும் பெயர் அவனவன் நற்செயலுக்குரியட் பெயரென்று அறிந்துள்ளார்க்கு அச்சங்கை தோன்றாவாம்.

தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறந்த பிறப்பொன்றுமாகிய இரு பிறப்பைக் கொண்டு வடமொழியில் பிராமணரென்றும், சருவவுயிர்களையும் தன்னுயிர்போல் கார்க்குந் தண்மெயுள்ளோர்களை தென்மொழியில் அந்தணர்கள் என்றும், அவரவர்கள் நற்செயல்களுக்குரிய கியானப் பெரும்பெயர்களை புத்தசங்கத்தோர் வகுத்து வைத்திருக்கின்றார்கள். அதற்குப் பகரமாய் மோசே என்னும் மகாஞானியானவர் தன் தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பொன்றும்,

தனது முடிவுகாலத்தில் யாதோருதவியுமின்றி தேகத்தைப் பள்ளத்தாக்கிலடக்கி சோதியுருவாக மாற்றி பிறந்து கிறீஸ்து பிறந்த முப்பத்திரண்டாவது வயதில் சீன பருவத்தில் அவருடன் சோதியுருவாகத் தோன்றிய உருவைக் கொண்டும் அவரை இருபிறப்பாளனாகிய யதார்த்தபிராமணனென்றும் கூறியுள்ளோம்.

இத்தகைய பிறப்பையே கிறீஸ்துவும் தனது போதகத்தில் ஒரு மனிதன் மறுபடியும் பிறவாமல்படிக்குப்போனால் பரலோகராட்சியத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

மோசே என்பவருக்கு ஞானதெளி விளக்கம்

மோசே குமரபருவம் பெற்றிருக்குங்கால் தனது தமயனை மற்றொருவன் அடிக்கச் சகியாது அவனைத் தானடிக்க அவன் உயிர் துறந்தான். கொல்லவேண்டுமென்றடியாது கோப மீண்டு அடித்தவராதலின் அவன் இறப்பினால் பயந்து சுதேசம்விட்டுப் புற தேசம் ஓடிப்போய்விட்டார்.