பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

570/அயோத்திதாசர் சிந்தனைகள்


தோட்டத்தின் மத்தியபீடமே அரையென்பதற்குப் பகரமாய் இஸ்திரியானவள் நிர்மானமுடையவளாயிருந்து மானமுண்டாய் தனது மத்தியதானமாம் அரையை இலைகளால் மூடிக் கொண்டதே போதுஞ் சான்றாம்.

பாம்பு வஞ்சித்ததென்னும் வர்ணனை யாதென்பீரேல்-பெளத்த சாஸ்திரிகள் இஸ்திரீகளின் மத்தியதானத்தை அல்குலென்றும், சர்பமென்றும் குறித்திருக்கின்றார்கள்.

அதினால் இஸ்திரீயும் தனக்குள்ள இன்பஸ்தானமாம் அல்குலென்னும் சர்ப்பம் தன்னை வஞ்சித்ததென்றுங் கூறியிருக்கின்றார்கள்.

இதற்குப் பகரமாகவே கிறீஸ்துவும் தாயின் வயிற்றினின்று பிறந்ததுமுதல் அண்ணகர்கள் என்னும் விவாகமில்லாமல் இருப்பவர்களும் உண்டு மற்றவர்களால் விவாகஞ்செய்யாமலிருக்கச் செய்வதும் உண்டு. பரலோக ராட்சியத்தினிமித்தம் விவாகஞ் செய்யாமல் இருப்பவர்களும் உண்டு என்றும் கூறியுள்ளார்.

கொருந்தியரும் நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படி பிரியமாயிருக்கலாம் என்று கர்த்தருக்கு உரியவைகளுக்காக கவலைப்படுகின்றான் என்றும்,

இஸ்திரீயைத் தொடாமலிருப்பதே நல்லதென்றுங் கூறியிருக்கின்றார். ஏனெனில் புத்திரசந்தானம் வேண்டும் என்னும் நன்மெயைக் கருதியவிடத்து சதா இன்பத்தைக் நாடி தின்மெய் அடைவார்கள் என்பதேயாம்.

இத்தகைய நன்மெயாம் பேரின்ப விருட்சத்தையே பெளத்த சாஸ்திரிகள் ஜீவவிருட்சம் என்றும், கற்பகத்தருவென்றும் வரைந்துள்ளார்கள்.

- 2:27; டிசம்பர் 16, 1908 -

மோசே யென்னும் மகாஞானியார் இருந்த இடவிவரமும் சென்ற இடவிவரமும் கால விவரமும்

நமதன்பருள் சிலர் தருமோற்பவ போதத்தையும், அதன் பலனையும் உணராது மோசேயவர்கள் எகிப்த்தைவிட்டு அரேபியாவுக்கு அப்புறம் வரவில்லையே இவருக்கு புத்ததன்மம் எங்ஙனம் வரக்கூடும் என்பாரும் உண்டு.

சீனா மலை எகிப்த்திற்குக் கிழக்கு. அரேபியாவுக்கு வடக்கு. இவ்விரண்டிற்கும் கரைவழிகளும் போக்குவருத்தும் உண்டு.

அவ்வழியாய்ப் போக்குவருத்துள்ள விஷயங்களை சிலது எழுதியும், சிலதை விட்டும் இருக்கலாம்.

அதாவது மோசேயவர்கள் 39 வயதளவும் ஏகிபத்திலிருந்தாரென்றும், 79 - வயது வரை டையர் போன்ஷியா என்னும் நாடுகளில் இருந்தார் என்றும், 80 - வயதில் எகிபத்திலிருந்து இஸ்ஸரவேலரை விடுதலைச் செய்தாரென்றும், பின்பு ஜெரிகோ பட்டணத்தை இஸ்ஸரவேலருக்குக் காட்டிவிட்டு ஓர் மலையில் சமாதியாகி விட்டபடியால் இவர் எவ்வழியாய் சீனாமலைக்குப் போயிருப்பார் என்றுஞ் சங்கிப்பாரும் உண்டு.

புத்தபிரானால் ஓதி விம்பாசாரனால் கல்மலையில் அடித்திருந்த கற்பலகையோடெடுத்துச் சென்றவர் மோசேயே ஆதலின் அவரெவ் வழி சென்றார், எங்குபோனார் என்று விசாரிக்கவேண்டிய அவசரமில்லை.

ஈதன்றி கிறீஸ்த்து பிறப்பதற்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு திபேத்து பெளத்தமிடங்களில் உபயோகித்திருந்த ஜெபமாலை, பொதுக் கோரிக்கை, வீதிவலம், பரிசுத்த ஜலம், தீபதூபப் பாடல், குருக்கள் உச்சி சவரம் முதலியவைகள் யாவையும் பரிசுத்த அகஸ்தீன் காலத்தில் எகிபத்து மார்க்கமாகக் கொண்டுபோயிருப்பதாக (சிட்னி) அமேரிக்கா டாக்டர் ஹென்றி என்சால்ட் பிரசுரித்த “ஓரியன்ட் அன்ட் ஆக்ஸிடென்ட்” என்னும் பத்திரிகையில் தெளிவாக வரைந்திருக்கின்றார்.

கிறிஸ்து பிறப்பதற்கு இருநூற்றி அறுபது வருஷங்களுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தி அவர்கள் பௌத்த குருக்களை காபூல், கண்டாஹார், ஆப்கானிஸ்தான், சிரியா, மாசிடன், சிரீன் எபிராஸ், கிரீஸ், எகிப்து முதலிய