பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

572 /அயோத்திதாசர் சிந்தனைகள்


அவ்வொளியில் நடந்தவர்களே மகாஞானிகளாகவும், செல்லல் நிகழல் - வருங்கால மூன்றினையுஞ் சொல்லுந் தீர்க்கத் தெரிசிகளாகவும் விளங்கினார்கள். ஈதன்றி புத்தபிரான் பரிநிருவாணமாம் மாற்றிப் பிறக்கும் சுயஞ்சோதி பிரிந்தவுடன் அவர் தேகத்தை தகனஞ்செய்வதாய் அறிந்த ஏழு அரசர்கள் ஆசியாகண்டத்தின் பல பிரிவுகளிலுமிருந்து மிக்க சந்தனக் கட்டைகளைக் கொண்டுவந்து தனித்து அஸ்திகளையும், சாம்பலையும், பாகித்துக் கொண்டுபோய் ஏழு இந்திரவியாரங்களைக் கட்டிவிட்டதுமன்றி கோபாலர்களாகிய அரசபுத்திரர்கள் அச்சாம்பலைச் சிறு பெட்டிகளில் வைத்துக் கொண்டு அவற்றை நெற்றியில் வைத்து குலகுருவை சிந்தித்து வந்தவர்களும், மடத்தில் தங்கி சமணநிலை பெற்றவர்கள் சாம்பலை வாரிக்கொண்டுபோய் பத்திரமாகவைத்துக் கொண்டு அச்சாம்பலின் பேரில் வஸ்திரத்தை விரித்து அதன்மீது தங்கள் மொட்டைத் தலையுடன் உட்கார்ந்து ஞானசாதனங்களை சாதித்து சிறு வாசலில் சென்று முத்திபேறாம் நிருவாணதிசை அடைந்திருக்கின்றார்கள். அதையநுசரித்த மோசே என்னும் மகாஞானியாரின் கியானபரம்பரை ஓர் கேட்டுக்குக் கொண்டுபோகும் பேராசையாம் விசாலவழியில் செல்லாமல் நீதிநெறியாம் சிறுவாசலில் சென்று மேற்கூறிய சாம்பலை பரப்பி அதன்மீது ரெட்டை விரித்து தாங்களும் உழ்க்கார்ந்து ஞானசாதன சித்திபெற்றதை இதே மோசேயவர்களின் பரம்பரை நூலால் அறிந்துக் கொள்ளலாம்.

காசிக்கலம்பகம்

முத்திக்குவேட்டவர் மோட்டுடற் /பாரமுடைத்தலையோ
டத்திக்குஞ் சாம்பற்கு மோம்பினரா / லிவையன்றி யாப்பாற்
சித்திப்பது மற்றிலைபோலுங் / காசிச் சிவபெருமான்
பத்திக்குக் சேவலமே பலமாகப் / பலித்ததுவே.

நிகழ்காலத்திரங்கல்

அத்தியுஞ் சாம்பலையும் அடியிலிட்டுப் பூரித்து / முத்தியாம் மோனம் முடித்த ததிசயமே.
சாம்பலின் சித்தியோ சற்குருவின் பேரன்போ / ஆம்பல் அடிபோ லமைந்த ததிசயமே.

இத்தகைய ஞானசாதன ஆதாரங்களால் புத்தாகமத்தைத் தழுவியதே மோசே யாகம் என விளங்கினபோதிலும் புத்தபிரானே உலகெங்கும் சுற்றி சங்கங்களை நாட்டியுள்ளவைகளை சரித்திரங்களாலும், சிலா சாசனங்களாலும் அறியலாம்.

சங்கங்களை நாட்டி சகல சங்கங்களுக்குத் தலைவராயிருந்தபடியால் சங்கமித்தர், சங்கதருமர், சங்கரர், விநாயகர், சபாநாயகர், சபாபதி, கணநாயகர், கணபதியென்னும் பெயர்களையும் அவருக்களித்துள்ளார்கள்.

அதே சங்கங்களுக்கு மோசேயின் ஆகமத்தோர் திருச்சபைகள் என்னும் பெயரைக் கொடுத்து ஒரு சபையோருக்கு மற்றொரு சபையோர் எழுதியுள்ள ஞானசாதனங்களையும், நீதி மொழிகளையும் ஒன்றுசேர்த்து தற்காலத்துள்ள பைபிலென்னும் புத்தகரூபத்திற்கு ஆதாரமாயிருக்கின்றது.

உலகத்தில் தோன்றியுள்ள மநுகுலச் சீர்திருத்தக்காரருள் சற்குணரென்றும், நல்லவரென்றும் உலகம் முழுவதும் கொண்டாடியவரும் தற்காலமுள்ள விவேகமிகுத்தவர்களால் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரான் என்னும் சிரேஷ்டப் பரம்பொருளே ஆதலின் அத்தகைய சற்குணரை அறியவேண்டிய நாம் சற்குணத்தைப் பெறவேண்டிய சாதனங்களையும் அவைகளுக்கான ஒழுக்கங்களையும் அநுட்டிக்கவேண்டுமே அன்றி வீண்காலம் போக்குவதினாலும், வீண்வாதம் புரிவதினாலும், சற்குணம் நிலைபெறாது. சற்குணம் பெற்று நித்தியசீவனாம் நிருவாணமடைவதே மாநுஷீக தன்மமாதலின் நாம் ஒவ்வொருவரும் தன்மதம் புறமதமென்னும் சினமுறாமலும், தன்னினம் புறவினமென்னும் பேதம் பாராமலும், களங்கமற்ற விசாரிணையினின்றும் நீதியின்னது அநீதியின்னது நீதியின் வழி நடத்தலால் உண்டாகுஞ் சுகமின்னது அநீதியின் வழியில் நடத்தலால் உண்டாகும் துக்கம் இன்னதென்று உணர்ந்து சுகவழிகளைக் கண்டு நடப்பதே சத்திய தன்மமாகும்.

அத்தகைய சத்தியதன் விதையை கற்பாறை என்னும் மந்தபுத்தியுள்ளோருக்கும், முட்செடிகள் அடர்ந்த பூமி என்னும் மதுபானப் பிரியம்,