பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுகம்/575

இச்சித்தலால் சாவவே சாவான் என்னும் மொழிக்கு மறுப்பாய் சிற்றின்பமாம் கனியை இச்சியாதவன் சாகவே சாகானென்பது சான்றாயிற்று.

தாவீதரசனும் தன் சங்கீதத்தில் நீர் மவுனமாயிருந்தால் நான் குழியிலிறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேனென்றும்,

கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டென்றும்,

ஏசாயா தீர்க்கதரிசியும் பாதாளம் உம்மை துதியாது, மரணம் உம்மைப் போற்றாது. குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை என்றும்,

கிறீஸ்துவும் பாபத்தின் சம்பளம் மரணமென்று கூறியுள்ளதுமன்றி தனது மாணாக்கரிலொருவன் தன் குடும்பத்தோரில் இறந்துபோனவனை அடக்கஞ்செய்து வருவதற்கு உத்திரவு கேட்டபோது கிறீஸ்துவும் அவனை நோக்கி மரித்தோரை இனி மரிப்போர் அடக்கம் பண்ணட்டும் நீ என்பின் தொடர்ந்து வாவென்று சொல்லிப்போய்விட்டார்.

அதினந்தரார்த்தம் யாதெனில், உலகப்பொருளின் இச்சையால் அலைபவர்கள் பிறப்பதும், இறப்பதும் சுவாபமாகும். கிறீஸ்துவைப் பின்பற்றி அவர் போதகமேறை நடப்பவர்கள் உலகப்பொருட்களின் மீது பற்றற்றவர்களாதலின் இறந்தோர் தொழில்களுக்கு அவர்களை வேகவிடாது மரணத்தை ஜயிக்கும் சிறந்தவோர் தொழிலுக்கு நிறுத்திவிட்டார்.

மனத்தின் செயலையும், அதன் சிறப்பையும் அறியா அன்பர்களில் சிலர் ஈதேது நூதனார்த்தமாயிருக்கின்றது கிறீஸ்தவர்கள் யாவரும் கிறிஸ்து தங்களுக்காக மரணமடைந்தார் என்று கூறியிருக்க இத்தமிழன் பத்திராதிபர் கிறீஸ்து மரணத்தை ஜெயிக்கும் வழிகாட்டியாயிருக்கின்றார் என்று கூறுவது விந்தையேயென விளம்புவாரும் உண்டு.

மனமணியின் மகத்துவம் அறியாதோர்க்கீதோர் விந்தையேயாகும்.

ஆயினுமாகுக கிறீஸ்துவாகிய மகான் குணதீட்சை பெற்று நாற்பது நாள் சாதனை புரிந்து அதன் பலனைப் பெற்று அதினானந்தத்தால் உலகத்தையாளலாமென்னும் இச்சையால் பைசாசந் தோன்றிற்று.

அப்பைசாசமாகும் உலகயிச்சையை அகற்றி தான் கண்ட காட்சியை தான் மட்டிலும் சுகித்துக்கொள்ளாது ஏனைய மக்களுக்கும் அருள்செய்ய வேண்டும் என்னும் இதக்கத்தால் சத்தியதன்மத்தை அங்குள்ள சகலருக்கும் போதிக்கவாரம்பித்தார்.

இவர் போதித்த சத்தியதன்மமானது அவ்விடத்திருந்த அசத்தியர்களாகும் சதுசேயர், பரிசேயரென்னும் வஞ்சகர்களுக்குப் பொருந்தாது.

அவரைக் கொல்ல வழித்தேடினார்கள்.

அதற்கநுசரணையாய் “2. கொரிந்தியரில் கூறியவாறு அவரது பலயீனத்தால் சிலுவையில் அறையுண்ணும்படி நேர்ந்தது.” பலயீனமாவது முற்கன்ம பலனேயாகும். அக்கன்மத்தை ஜெயித்து பிழைத்திருக்கின்றதுமன்றி.. “நாங்களும் அவருக்குள் பலயீனராயிருக்கிறோம் உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனே கூடப் பிழைத்திருப்போமென்றும் கொரிந்தியர் வரைந்திருக்கின்றார்.

அசத்தியர்களாம் சத்துருக்களின் மித்திரபேதத்தால் வினையின் பாடுவந்து நேர்ந்தும் மெய்ஞானிகளின் சேர்க்கையாலும், தனது வித்தை மிகுதியினாலும் அப்பாட்டை ஜெயித்து தனக்குள் அடக்கிக்கொண்டு விதேக முக்த்தியடைந்தார்.

விவேக மிகுத்தோர்களின் ஜெயம்

சரமழைகள் நெய்தல் மலர் மழையையொக்கும்
தழற்பள்ளி பனினீரிற் சயனமொக்கும்
சிரமறிதல் சுகமுரு நித்திறையை யொக்கும்
தெகமறிவ துக்கலவை செரிப்புச் சொக்கும்
நிரவரிய நாராச மருமம் பாய்தல்
விரகறிய வினையினூழ் பலன்கள் யாவும்
விவேகமிகுத்தவர்க்கலால் விலக்கொணாதே.

விசுவாச மிகுத்தோர்களின் ஜெயம்.