பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 581


மேற்கண்டபடி,

திருமேவு பதுமஞ்சேர் திசைமுகமு முதவாகி
வுருமேவி யவதரித்த வுயிரனைத்து முயக் கொள்வா
னிவ்வுலகுந் கீழுலகு மிசையுல மிருள்நீங்க
வெவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்தசெழுஞ் சுடரென்ன
விலங்குகதி ரோரிரண்டும் விளங்கி வலங்கொண்டுலல
வலங்குசினைப் போதினிழ லறமமர்ந்த பெரியோய் நீ

புளியம் ஓடு நீக்கிய பழம்போலும், புழுவின் செட்டை நீக்கிய விட்டில் போலும், நெல்லின் உமிநீக்கிய அரிசிபோலும், நான்குபூத சரீரவுருபோக்கிய அசரீரியாய் நற்சேத்திரம்பெற்று அகண்டத் துலாவுகின்றார்கள்.

சீவகசிந்தாமணி - தேவர்கள் இலட்சணம்

திருவிற்போற் குலாய தேந்தார் / தேவர்தன் தண்மெய் செப்பிற்
கருவத்து சென்று தோன்றார் / கானிலந் தோய்தல் செல்லா
குருவமே யெழுதலாகா / வொளியுமிழ்ந் திலங்குமேனி
பரிதியி னியன்றதொக்கும் / பன்மலர் கண்ணிவாடா.

இவர்களது தோற்றம் ஓர் பிரபுவை பிரபுசென்று தெரிசனங்கொடுப்பது போலும், அரசனை மற்றோர் அரசன் கண்டு தெரிசனைக் கொடுப்பது போலும், சுயம்பிரகாச தேவர்கள் யாவரும் ஞான கருணாகர முகம் கொண்டவர்களுக்கே தெரிசனம் ஈவது இயல்பாகும்.

தாயுமானவர்

ஞான கருணாகரமுகங் கண்டபோதிலோ
நவநாத சித்தர்களுமுன்னட்பினை விரும்புவார்
சுகர் வாமதேவர்முதன் ஞானிகளு முனை மெச்சுவார்.

இடைகாட்டுசித்தர்

ஆதிபகவானையே பசுவே அன்பாய்துதிப்பாயேல்
சோதிபரகதிதான் பசுவே சொந்தமாதாகாதோ.

ஒளவையார் ஞானக்குறள்

வெள்ளிப்பொன் மேனியதொக்கும்வினையுடைய
உள்ளுடம்பினாய வொளி.

தாயுமானவர்

பந்தமெல்லாந்தீர பரஞ்சோதி நீகுருவாய்
வந்தவடிவை மரவேன் பராபரமே.

இத்தகையதாய் ஆதிதேவனின் அருள்மொழியைப் பின்பற்றிய மோசே என்னும் மகா ஞானியாரும், ஏனோக் - எலியா - கிறிஸ்து என்னும் மேன்மக்களும், தங்கள் உள்ளொளியைப் பிரகாசிக்கச் செய்ததுமன்றி நித்திய சீவிகளாகவும் வாழ்கின்றார்கள்.

அதாவது - கற்பகவிருட்சக் கனியென்றும், ஜீவவிருட்சக் கனியென்றும் வழங்கும் அமுத்தாரணைப் புசிப்பின் பேரின்பத்தினாலேயாம்.

தேவன் வொளியாயிருக்கின்றார் என்றும், கிறிஸ்து வொளியாயிருக்கின்றாரென்றும், ஒளியை வெளிபடுத்துதற்கேகி கிறீஸ்துவந்துள்ளாரென்றும், அப்போஸ்தலர்களால் தெளிவாக வரையப்பட்டிருக்கின்றது.

1 தீமோத்தேயு, 6-ம் அதிகாரம், 15-ம் வசனம்.

“அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலத்தில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கிராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும் ஒருவராய் சாவாமெய் உள்ளவரும், சேரக்கூடாதவரும், ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனிதரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாய் இருக்கிறவர் அவருக்கே கனமும், நித்தியமும், வல்லமெயும் உண்டாயிருப்பதாக. ஆமென்.”

- 2:36: பிப்ரவரி 17, 1909 -

அதற்குப் பகரமாயுள்ள புத்தர் தியானத்தைக் காணலாம்.

வீரசோழியம்

அருளாழி பயந்தோய் நீஇ அறவாழி நிறைந்தோய் நீஇ
மருளாழி துறந்தோய் நீஇ மலையாழி புரிந்தோய் நீஇ