பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

590 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கடியவர் படியிற்கண்டு செய்தவற் கஞ்சிக்காவை
நெடியதோர் மரத்தினேறி நித்தமா யழைத்திட்டானே.

270

தூயநல் வேதநான்குஞ் சொல்லிய சாதியாதி
மேயநல் லமைச்சனென்னும் விருதுமெய் யுரைத்தலென்னுந்
தீயிலாத் தொழில்னென்றுந் தேறியான் வைத்தசெப்பை
மாயநீ செய்து கொண்டால் வரும்பழி பாவமன்றோ.

271

கொற்றவெண் குடையுஞ்சீ வனையுஞ்சாய மரையுமுற்றால்
வெற்றிவேல் வேந்தனென்ன நீயென்ன வேறிலாதாய்
குற்றமென் றறிந்துமென்ன குறையிலென் செப்பைகொண்டாய்
மற்றிதோ பூதிமாய மாகுமிவ் வையத்தையா.

272

மறம்பழி வருமேநிந்தை வந்தெய்த மணியைவவ்வி
அறம்புகழ் பெருமெய் கீர்த்தி யறிவொடு செறிவிலாய்க்கும்
பிறந்துவைத்தூறுதொட்டு வைப்பினை வவ்வுவாரை
துறந்திடுந் திருவென்றோதுஞ் சுருதியும் விருதுமாய்த்தே.

நாய்களுக்கும் யானைகளுக்கும் பயந்து மரத்தேறி அவ்வணிகன் கூறிவந்த நீதிவாக்கியங்களை இராணியார் செவ்வனே உணர்ந்து வேவு கரை விட்டு வணிகனை அழைத்து அவன் மெய்வாக்கையும் வேஷவேதியனாம் மந்திரியின் பொய் வாக்கையும் கண்டறிந்து செப்பைக் கொண்டு வரும்படியான ஏதுவைத் தேடி மந்திரியை தண்டித்துவிட்டு பறைபானென்று கூறப்பட்ட வணிகனுக்கே மந்திரிபட்டம் கொடுத்துள்ள சங்கதிகள் யாவையும் மேருமந்திர புராணத்தில் தெளிவாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

- 2:49; மே 19, 1909 -


13. மேருமந்திரபுராணம்

வினா : அதாவது - பெரியபுராணம், கந்தபுராணங்களைக் கண்டுமிருக்கின்றோம், கதைகளைக் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் மேருமந்திர புராணம் என்பதைக் கண்டதுமில்லை. கதைகளைக் கேட்டதுமில்லை ஆதலின் பத்திராதிபர் அன்புகூர்ந்து அப்புராணம் ஓலையிலெழுதப்பட்டிருக்கின்றதா, அச்சிட்டிருக்கின்றார்களா, அது எங்கு கிடைக்கும் கண்டெழுதக் கோருகிறோம்.

இரண்டாவது, ஓர் கூட்டத்தோரை பெளத்த மார்க்கத்தோரென்று மனப்பூர்வமாகத் தெரிந்தும் அக்கூட்டத்தோரைப் பறையர்கள் என்று கூறியிருக்கின்றார்களா, அவ்வகையான ஆதாரங்கள் ஏதேனுமிருந்தாலும் அதையும் தெரிவிக்கும்படி மிகக் கேட்டுக் கொள்ளுகிறோம்,

பி. சேஷகிரிராவ், சேலம்.

விடை: மேருமந்திர புராணம் புதுக்கோட்டை சமஸ்தான வித்துவான் பனையஞ்சேரி முருகேச கவிராயரவர்கள் சகோதிரராகிய அரங்கசாமி கவிராயரவர்களால் திருத்தப்பட்டு நூலாக்கியோன் பெயரின்றி ம-அ-அ-ஸ்ரீ சக்கிரவர்த்தி நாயனாரவர்களால் புஷ்பரதச் செட்டியாரவர்கள் அச்சுக்கூடத்தில் பிரசுரப்படுத்தி இருக்கின்றார்கள் வேண்டுவோர் பெற்றுக் கொள்ளலாம்.

சமஸ்கிருதத்தில் எழுதியுள்ள வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பதினைந்தாவது அத்தியாயம் பதினைந்தாவது வாக்கியத்தில் கூறியுள்ளவை யாதெனில்:-

அனுமாரானவர் இலங்காதீவத்திற்கு சென்று சீதாபிராட்டியை எங்கும் தேடிக் காணாமல் ஆரண்ணியத்திலுள்ள ஓர் கோபுரத்தின்மீது உட்கார்ந்து இது பௌத்தர்களின் சிறப்புப்பெற்ற மடமென்று கூறியதாக வரைந்திருக்கின்றது.

அனுமாரின் வாக்கியத்தைக் கொண்டே அஃது பௌத்தர்களின் நாடென்று திட்டமாக வாசித்துணர்ந்த அருணாசல கவிராயரவர்கள் தானியற்றியுள்ள ராமநாடகம் சுந்தரகாண்டச் செய்யுளில்,