பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 17


இவ்வகை நோக்கத்தை அரசன் காணாது முழு நம்பிக்கையில் வைத்திருப்பானாயின் மற்றுஞ் சிலநாளைக்கும் அரசையே தன்னதாக்கிக் கொள்ள முயலுவான்.

ஆதலின் அரசவாட்சியிலிருக்கும் அங்கத்தவர் ஒவ்வொருவரும் பொருளாசையற்றப் புண்ணியர்களும் அருளாசையுற்றவன்பர்களும் நீதிநெறி அமைந்த நிபுணர்களாகும் மேன்மக்களாயிருப்பார்களாயின் சருவ உயிர்களையும் தங்களுயிர்போல் பாதுகாத்து குடிகளுக்கு நீதிநெறிகளைப் புகட்டி ஆதரித்து அரசனுக்கு ஆற்றலையும் ஆனந்தத்தையும் உண்டுசெய்து வைப்பார்கள்.

(இத்தொடர் கட்டுரை தொடர்ச்சியாக வராமலும் நிறைவு பெறாமலும் நின்று விட்டது)

- 1:41; மார்ச் 25, 1908-


2. சுவாமியைத் தொழுவதில் சண்டைபிடிப்பவர்கள் சுயராச்சியங்கொண்டால் சும்மாயிருப்பரோ

திரிசிரபுரம் ஸ்ரீரங்கர்கோவில் உற்சவம் நடந்து ஆழ்வார்சுவாமிகளை ஊர்வலங்கொண்டு வருங்கால் வடகலை தென்கலை நாமம் போட்டுத் திரியும் பாப்பார்கள் பொறாமெயினால் சண்டையிட்டு சுவாமியென்றுக் கவனிக்காது ஆழ்வார் கழுத்திலிட்டிருந்த மாலையைப் பிடிங்கியும் அவரைக் கீழே தள்ளவும் ஆரம்பித்து போலீசாரால் பிடிபட்டு விசாரிணையிலிருக்கின்றார்கள். பாப்பார்கள் ஆழ்வார்மீது வைத்திருப்பது அதிபக்தியா. பொருளின்பேரில் வைத்திருப்பது நிதயுக்த்தியா. ஆராய்ச்சிச் செய்யுங்கால் இத்துடன் சுய அரசாட்சிக்குத் தலைவராக இருக்கும்படி தென்கலையாருக்குக் கொடுக்கலாமா, வடகலையாருக்குக் கொடுக்கலாமா, குருக்கு பூச்சுக்குக் கொடுக்கலாமா, நெடுக்குபூச்சுக்குக் கொடுக்கலாமா என்பதையும் ஆராய்ச்சி செய்துவைத்துக் கொள்ளுவோமானால் ஆழ்வாரைக் கீழேதள்ள ஆரம்பித்ததைப்போல் சுய அதிகாரம் பெற்றவர்களைத் தள்ளாமல் சுகம்பெற்று வாழ்வரோ இல்லை இல்லை .

- 1:13; செப்டம்பர் 11, 1907 -


3. இன்னோர் விசேஷம்

ஒருபட்சத்திற்குமுன் வெளிவந்த இலங்காதீவப் பத்திரிகைகளில் ஓர் பிராமணனென்போர் மகமதியர்மார்க்கத்தைத் தழுவியதாகக் கண்டோம். இவ்வாரத்துப் பத்திரிகையில் மகமதியர் பெருங்கூட்டங்கூடி அவருக்குச்சில பொருளுதவி செய்ததாகவுங் கேட்டு சந்தோஷிக்கின்றோம்.

கனவான்களே, மகம்மதியர்மார்க்கத்தில் ஓர் பிராமணன் அவாக்கொண்டு சேருகிறேனென்று சொன்னவுடன் அவர்களுள் சேர்த்து தங்கள் மார்க்க ஞானங்களையும் ஊட்டி பொருள் சேகரித்து மீட்டி ஆதரித்திருக்கின்றார்கள், அதுபோல் ஓர் மகமதியன் பிராமண மதத்தில் சேரவேண்டுமென்று அவாக்கொண்டு பிராமணர்களை வந்துக் கேட்பானாயின் அம்மகமதியனை பிராமணர்கள் சேர்த்து தங்கள் ஞானத்தையும் போதித்து பொருளையுஞ் சேதிப்பர்களோ இல்லை. தன் சுகத்தைப் பார்த்துக்கொண்டு எதிரி சுகத்தைப் பார்க்காத மார்க்கமும் மார்க்கமோ? சமயமும் சமயமாமோ? மதமும் மதமாமோ? அன்னோர் கடவுளுங் கடவுளாமோ?

மகமதியனான பிராமணனை தன் தாய் தந்தையரும் பெண்சாதி பிள்ளைகளும் சாதிகெட்டுவிட்டானென்று நீக்கியும் விடுகின்றார்கள். இவ்வகை நீக்கிவிட நேரிட்ட பிராமணன் யதார்த்த பிராமணனாவானா? அங்ஙனம் யதார்த்த பிராமணனாயின் மகமதியர் மார்க்கத்தைத் தழுவியவுடன் கெட்டுப்போவானா ஒருக்காலுங் கெடான்.

பொன்னைக் கொண்டுபோய் பித்தளையுடன் சேர்த்தாலும், இய்யத்துடன் சேர்த்தாலும் பொன்னைப் பொன்னாகவே பிறித்து எடுத்துக் கொள்ளலாம். பித்தளையை இரும்புடன் சேர்த்தாலும் இய்யத்துடன்