பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 613


விளங்கா கூட்டத்தோர் பெருகிவிட்டபடியால் வேஷப்பிராமணர்களை அடுத்து அவில் பிரசாதங் கேட்க ஆரம்பிக்குங்கால் வேஷப்பிராமணர்கள் உபநயனமென்னும் வார்த்தையின் பொருளும், அதன் செயலும் தெரியாதவர்களாய் இருந்தபோதினும் அவ்வார்த்தையைக் கொண்டே பேதை மக்களை ஏமாற்றி நான்பிராமணனானதால் என் பிள்ளைக்கு உபநயனஞ்செய்து என்னைப்போல் பூநூலணியப் பொருளுதவி செய்யுங்கோளென்று பொருள்பறித்துப் புசிப்பதற்கு இதையுமோர் வழியாகச் செய்துகொண்டார்கள். கல்வியற்றக் குடிகளோ வேஷப்பிராமணர்களைத் தடுத்து உபநயனமென்பதின் பொருளென்ன, முப்புரி நூலணிவதின் காரணமென்ன, அதற்காக நேரிடும் செலவென்ன, அவ்வகைச் செலவு தொகையைத் தங்களுக்குக் கொடுப்பதினால் எங்களுக்குப் பயனென்னவென்று கேட்காமலே பொருளுதவிச் செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். இவ்வுபநயன மென்னும் மொழியே வேஷப்பிராமணர்களின் தந்திரசீவனத்திற்கு நான்காம் ஏதுவாகிவிட்டது.

பெளத்த உபாசகர்களின் விரதமாவது யாதெனில், சத்தியசங்க வியாரங்களுக்குச்சென்று புருஷர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் மனம்போனவழிப் போகவிடாமற் கார்ப்பது விரதம், இஸ்திரீகள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் தங்களது கற்புக்கு ஓர் பின்னமும் வராமற் கார்ப்பது விரதம், மைந்தர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் கலை நூற்களைக் கற்று அறிவை விருத்திசெய்து தேகத்தைக்கார்ப்பது விரதம். இவ்விரதத்தை சதா சிந்தனையில் கார்ப்பதற்கு அமாவாசி, பௌர்ணமி, அட்டமி இம்மூன்று தினத்தும் தாங்களணிந்துள்ள பட்டாபரணம், வெள்ளி பாபரணம், தங்க வாபரணம் யாவையுங் கழட்டிவீட்டில் வைத்துவிட்டு துய்ய வஸ்திரங்களை அணிந்து மடங்களுக்குச் சென்று யதார்த்த பிராமணர்களாம் அறஹத்துக்களை வணங்கி புருஷர்கள் பஞ்சசீலம் பெற்று மனதைக் கார்ப்பதும், இஸ்திரீகள் பஞ்சசீலம் பெற்று கற்பைக்கார்ப்பதும், பிள்ளைகள் பஞ்சசீலம் பெற்று தேகத்தைக் கார்ப்பதுமாகிய விரதத்திலிருந்து அன்று முழுவதும் ஒரேவேளை அன்னம் புசித்து அவரவர்கள் இல்லஞ் சேர்வது இயல்பாம்.

விளங்காக் குடும்பங்கள் பெருகி வேஷப்பிராமணர்களை அடுத்துக் கொண்டபடியால் வேஷப்பிராமணர்களை விரதமென்னையென்று கேட்குங்கால், கார்ப்பது விரதமென்னும் சாராம்ஸமே அறியாதவர்களாயிருந்தும் வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தந்திரோபாயத்தால் மிக்க தெரிந்தவர்களைப் போல் கல்வியற்றக்குடிகளை மயக்கி பலவகைப் பொய் தேவதாப் பெயர்களைச் சொல்லி சோமவார விதம், மங்களவாரவிரதம், சனிவார விரதம், சுக்கிரவார விரதமெனும் உபவாசங்களை அநுஷ்டித்து எங்களுக்கு தானஞ்செய்து வருவீர்களாயின் சகல சம்பத்தும் பெருகி சுகசீவிகளாக வாழ்வீர்களென்று கூறி பொருள்பறித்து சீவிப்பதற்கு விரதமொழியே ஐந்தாவது ஏதுவாகிவிட்டது.

பெளத்த உபாசகர்கள் செய்துவந்த நோன்பென்னும் செயல் யாதெனில், பஞ்சசீல தன்மத்தில் அகிம்ஸா தன்மமே விசேஷ தன்மமாதலின் ஒருயிரைக் கொல்லவும்படாது, அதன் மாமிஷத்தைப் புசிக்கவும் படாதென்னும் முதன் நோன்மெ அடையவேண்டி சங்கத்துள்ள அறஹத்துக்களை வணங்கி பஞ்சசீலத்தில் கொன்று தின்னாமெ யென்னும் முதல் நோன்மெ அளிக்கவேண்டும்மெனக் கேட்பது வழக்கமாகும். அவ்வகை வினாவிய மொழியை ஞானாசிரியர்க் கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடையவராய் உபாசகனது வலதுபுஜத்தில் இனியொருகால் சீவர்களைக் கொல்லுவதுமில்லை, புசிப்பதுமில்லை என்னுங் கங்கணங்கட்டி வந்துள்ள உபாசகர்கள் யாவருக்கும் அவுல்பிரசாதம் ஈய்ந்து குருவினது ஆசிர்பெற்று இல்லஞ் சேர்ந்து நோன்பென்பதுக் கொன்று தின்னாமை என்னுங் குறியை புஜத்திற் கண்டு நோன்பின் நெறியினின்றார்கள். ஈதோர் அகிம்ஸாதன்ம அறநெறியாகும்.

இத்தகைய அகிம்சா தன்மத்தின் சிறப்பும் அதன் பலனும் அதற்குரித்தாய் பஞ்ச நோன்பென்னும் மொழியின் பொருளுமறியாத பெருங்குடிகள் வேஷப் பிராமணர்களை அடுத்து நோன்பின் விஷயங்களை வினவுங்கால் மிலேச்சராம்