பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 645

களெல்லோரும் ஒன்றுகூடி தங்களை மடாதிபர்களென்று சொல்லிக் கொண்டு குடிகளை மாற்றி அரசன் மனைவியைக் கைப்பற்றிக்கொள்ளும்படி ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆதலின் தாங்கள் தாமதமில்லாமல் எழுந்து சொற்பசேனைகளுடன் வந்து பறையர்களின் கூட்டத்தை அவ்விடம் விட்டுத்துரத்தி, தேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கோளென்று கூறியதை அரசன் கேட்டு நீர்வளம் நிறைந்த பூமியை அபகரிக்கவேண்டுமென்னும் ஆசையால் காலாட் படை வீரர்களிற் சிலரை யழைத்துக்கொண்டு புருசீகருடன் சென்று நந்தன் அரண்மனையைக் கைப்பற்றி முற்றுகையிட்டு தன் இளவல் இலட்சுமணரெளவிடம் ஒப்பவித்து ஆளுகை செலுத்திவரும்படிச் செய்து தனது தேசத்திற்குப் போய்விட்டான்.

மிலேச்சர்களாம் ஆரியர்கள் பிராமண வேஷம் அணிந்துகொண்டபோது மராஷ்டகர்களுக்குள்ளும், பிராமணவேஷம் அணிந்துக்கொண்டவர்களிருக்கின்ற படியால் அப்பாஷைக்குரிய இலட்சுமணரெள அரசுபுரிகிறதை அறிந்து அவர்கள் வந்துவிடுவார்களாயின் நமக்கு யாதோர் அதிகாரமும் இல்லாமற் போய்விடும் என்றெண்ணி தம்மெச்சார்ந்த புருசீகர்கள் யாவரையும் இவ்விடந் தருவித்துக்கொண்டு நந்தனைச் சிதம்பித்த இடத்தை ஆலயமெனக் கட்டி அதனைச்சுற்றிலுங் குடியிருக்கத்தக்க வீடுகளைக் கட்டிக்கொண்டு அதன் புறம்பிலுள்ள பூமிகளைப் பண்படுத்திக் கோவிலைச்சார்ந்ததென்று ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பிராமண வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் விளங்கப் போதித்து அடித்துத் துரத்திவரும் பௌத்தர்களின் பயமில்லாமல் வாழலாம். அங்ஙன மிராது அஜாக்கிரதையி லிருந்துவிடுவோமாயின் நம்முடைய வேஷத்தை சகலரும் அறிந்துக்கொள்ளுவார்களென்று ஒருவருக்கொருவர் கலந்து தங்கள் சுற்றத்தோர்களில் பெருங்கூட்டத்தோர்களை அவ்விடம் வருவித்துக்கொண்டு இலட்சுமண ரெளவென்னும் அரசனால் தங்களுக்கு வேண்டிய இல்லங்களைக் கட்டிக்கொண்டதுமன்றி வேண்டிய பூமிகளையும் பெற்றுக்கொண்டு வாழ்க்கை சுகத்திலிருந்தார்கள்.

அக்காலத்தில் தங்கள் பூமிகளை சீர்திருத்தி பயிர்செய்வதற்கு அரசனைச் சார்ந்த மராஷ்டக பாஷைக்குடிகளைச் சேர்த்துக் கொண்டால் தங்களுக்கடங்கி ஏவல் செய்யமாட்டார்களென்றுகருதி திராவிட பாஷையில் கல்வியற்றவர்களும், சீலமற்றவர்களுமாய் இல்லமின்றி காடே சஞ்சாரிகளாக மலையடிவாரங்களில் திரிந்திருக்கும் சிலக் குடிகளைக் கொண்டுவந்து தங்கள் பண்ணை வேலையில் அமர்த்தி வேண்டிய ஏவலை வாங்கிக்கொள்ளுவதுமன்றி மற்றுமோர் பேரிழிவையும் சுமத்திவிட்டார்கள். அவை யாதெனில், மராஷ்டகக் குடிகள் உங்களை யாரென்று கேட்பார்களாகில் நாங்கள் பறையர்கள், பறையர்க \ளென்று துணிந்து கூறுங்கள். அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமென்று கூறிய மிலேச்சர்களின் வார்த்தையை கல்வியற்றக்குடிகள் பேரிழிவென்று அறியாமலும் இழி பெயரென்றுணராமலும் மராஷ்டக் குடிகள் நீங்கள் யாவரென்றுக் கேட்குங்கால் பறையர் பறையரென்றே பறைய ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அதன் காரணம் யாதெனில், பௌத்தர்களுக்குள் விவேகிகளும், வருங்காலம் போங்காலங்களை அறிந்துக்கொள்ளக்கூடிய மந்திரவாதி களானோர் மிலேச்சர்களாம் ஆரியர்களை அடித்துத் துரத்தி பௌத்தக்குடிகள் யாவருக்குமிவர்கள் வேஷவிவரங்களைப் பறைவதினால் பறையரென்றும், தாழ்ந்த சாதியென்றுங்கூறி இழிவுபடுத்தி வருவதை அவர்கள் ஒப்புக்கொள்ளாதுக் கண்டித்தும் வருகிறபடியால் அப்பறையனென்னும் பெயரைப் பட்சிகளைக் கொண்டும், மிருகங்களைக் கொண்டும் பரவச்செய்வதுடன் மக்கள் வாக்காலும் பரவச்செய்ய வேண்டுமென்னுங் கெட்ட எண்ணத்தினால் கல்வியற்றவர்களும், தங்கயில்லமற்றவர்களும், செல்வமற்றவர்களுமாகி காடேசஞ்சாரமும் மலையேசஞ்சாரமுமாயுள்ள ஏழைக்குடிகளைக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பறையர்களெனப் பறையும் வழியைத் தேடிக்கொண்டார்கள்.