பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 647


இத்தேசத்தில் ஆந்திர பாஷையை ஓர் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு ஆந்திரசாதியோரென்றும், கன்னட பாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு கன்னடசாதியோரென்றும், மராஷ்டக பாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு மராஷ்டக சாதியோரென்றும், திராவிடபாஷையை ஓர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனை கண்டு திராவிடசாதியோரென்றும் வழங்கிவந்தவற்றுள் மலையனூரான் கூட்டத்தோர் சாதிக்கும் பாஷையானது இம்மிலேச்சர்களுக்கு விளங்காது விழிக்குங்கால் மலையனூரான் திராவிட பாஷையில் பேசும்படி ஆரம்பித்தான். அவற்றையறிந்து ஆனந்தமுற்று அவனைத் தனித்தழைத்துபோய் நீங்களெல்லவரும் ஒரு பெருங்கூட்டமாக இவ்விடம் வந்ததை ஆலோசிக்குமளவில் உங்களுக்கு நல்லகாலம் பிறந்ததென்று எண்ணத்தகும்.

அவை யாதென்பீரேல், இத்தேசத்தரசனை சுவாமி ஆவாகனஞ் செய்துக்கொண்டவுடன் இந்நாட்டை ஆளுதற்கு வேறு அரசனில்லாமல் சொற்பக் குடியானவனொருவனைக் கொண்டுவந்து அரசாளும்படி வைத்திருக்கின்றோம் அவனால் இதையாளக்கூடிய சக்தியில்லாதபடியால் உங்கள் வியாபார மூட்டைக ளெல்லாவற்றையும் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களெல்லோரும் யுத்தமுகத்தராய் நின்று ஒவ்வொருவர் கையில் கோலுங் குண்டாந்தடியும் ஏந்தி நாளையுதய மூன்றேமுக்கால் நாழிகைக்கு மேல் ஒரே கூட்டமாகவந்து அரசன் மனையில் நுழைந்துவிடுவீர்களானால் உங்களுடன் அவனை எதிர்க்காமல்படி வோட்டிவிடுகின்றோம். நீங்களோ தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டு உங்கள் வியாபாரங்களைச் செவ்வனே நடத்திக் கொள்ளுவதுடன் அரசாங்க அதிகாரச்செயல்கள் யாவற்றையும் எங்களுத்தரவின் படி நடத்திவருவீர்களானால் நீங்களெல்லோரும் சுகசீவிகளாக வாழ்வீர்களென்று சொன்ன வார்த்தையைக் கேட்டவுடன் மலையனூரானுக்கு ஆனந்தம் பிறந்து அரசனிடம் வியாபாரத்தாய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வந்த நமக்கு அரசாட்சியும், அரண்மனையுங் கிடைப்பதோர் வியாபார யோகமென்றெண்ணி, தாங்கள் கூறியபடி நாளை உதயத்தில் நாங்கள் வருகின்றோமென்று கூறி அனுப்பிவிட்டார்கள்.

புருசீகர்கள் யாவரும் சோலையை விட்டகன்று அரண்மனைச் சேர்ந்து அரசனை அணுகி, அரசே, நமது மனைக்கு வடமேற்கேயுள்ள மாஞ்சோலையில் பெருத்தக் கூட்டமாக சில அன்னியதேசத்தோர் வந்திறங்கியிருக்கின்றார்கள். அவர்களுடைய நோக்கம் ஒரு வகையில் வியாபாரக் கிருத்தியமாகவும் மறுவகையில் யுத்தசனனதராகவும் கான்பதை அறிந்த யாங்கள் அவர்களை நெருங்கி அந்தரங்கச் செயலறிந்து வந்திருக்கின்றோம்.

அதாவது யுத்தத்தில் வல்ல தேகிகளும், யுக்தியில் பேரறிவாளரும், பக்தியில் பரமதியானிகளுமாயிருக்கின்றபடியால் நீங்களவர்களை எதிர்த்துப் போர் புரிவதை நிறுத்தத் தங்கள் அரண்மனை முகவாயலில் தங்கப்பாத்திரத்தில் நீரும் தங்கவட்டிலில் புஷ்பமும், துளசியுங் கொண்டுபோய் வைத்துவிட்டு சூரியன் மறைந்தவுடன் குடும்பத்தோரையும் காலாட் படைகள் யாவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் தமயனிடம் போயிருப்பீரானால் நாளை யுதயம் அவர்கள் யுத்தத்திற்குவந்து அரண்மனை முகவாயலிலுள்ள புஷ்பம், துளசி நீரிவற்றைக் கண்டவுடன் அடங்கித் தங்கள் சுயதேசந் திரும்பிப்போய் விடுவார்கள். உடனே தாங்கள் வந்து தேசத்தை ஆண்டுகொள்ளலா மென்று கூறியவஞ்சகர்களின் மித்திரபேதவார்த்தைகளை அரசன் மெய்யென நம்பி தங்கப்பாத்திரங்களில் புட்பமும் நீருங் கொண்டு வைத்துவிட்டு குடும்பத்தோர் யாவரையும் அழைத்துக்கொண்டு காலாட்படையினாதரவால் வாணோரெளவின் அரண்மனையைச் சேர்ந்துவிட்டான்.

மலையனூரானென்னும் வியாபாரியோ உதய மெழுந்து தன் கூட்டத்தோர் யாவரையும் யுத்தத்திற்குச் செல்லுவதுபோல் திட்டப்படுத்திக் கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றபோது தங்களை எதிர்ப்போர் ஒருவருமில்லையென்னும் ஆனந்தத்தால் மனையைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.