பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

648 / அயோத்திதாசர் சிந்தனைகள்


புருசீகர் முன்பிருந்த அரசனின் சொத்துக்கள் யாவையும் அபகரித்துக் கொண்டதுடன் வாயற்படியில் வைத்துள்ள தங்கப் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு தங்களில்லங்களில் சேர்த்துக்கொண்டதுடன் மலையனூரானை ஓர்பிண்டமாகப்பிடித்து வைத்துவிட்டு இராஜாங்க சகல காரியாதிகளையுந் தாங்களே நடாத்திவந்தார்கள்.

இத்தியாதி சங்கதிகளையுங் கண்ணுற்ற மராஷ்டக வேஷப்பிராமணர்கள் தங்களுக்கு ஏதேனுங் கெடுதி உண்டாகுமென்றெண்ணி அவர்களும் விலகிவிட்டார்கள்.

மராஷ்டக அரசனும், மராஷ்டகக் குடிகளும், மராஷ்டகக் காலாட்படைகளும், மராஷ்டக வேஷ பிராமணர்களும் அவ்விடம்விட்டகன்றவுடன் மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு ஆனந்தம் பிறந்து பௌத்தர்களால் அவரவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறு சகட பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூஸ்திரனென்றும், திராவிட பாஷையில் அந்தணன், அரசன், வணிகன், வேளாளனென்றும் வகுத்திருந்த தொழிற் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி என வழங்கச்செய்து தங்களை சகலருக்கும் உயர்ந்த சாதி பிராமணர்களென சொல்லிக்கொண்டு அறப்பள்ளிகளையும், விவேகமிகுத்த சமணமுநிவர்களையும் அழித்துப் பாழ்படுத்தத்தக்க ஏதுக்களைச் செய்துவந்ததுமன்றி அறப்பள்ளிகளில் சமணமுநிவர்களால் பெரும்பாலும் வழங்கி வந்த சகடபாஷையின் சப்தம் நாளுக்குநாள் குறைந்து திராவிடபாஷை விருத்தியாகிவிட்டபடியால் கன்னடம், மராஷ்டக முதலிய பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரனென்னும் சாதிப்பெயர்களை வகுப்பதற்கு ஏதுவில்லாமல் மராஷ்டக பாஷையிலுள்ள சில வல்லமெயுற்றோரை க்ஷத்திரியராகவும், மிலேச்சர்களாகிய தங்களை பிராமணர்களாவும் ஏற்படுத்திக்கொண்டு திராவிட பாஷையில் மருத நிலமாகும் பள்ளியப்பதிகளை ஆண்டுவந்த சிற்றரசர்கள் சமணமுநிவர்களை ஏற்று இவ்வேஷப் பிராமணர்களை அடித்துத் துரத்தி பெளத்த தன்மத்தை நிலைநிறுத்தி வந்தபடியால் அவர்களையும் அவர்களுடைய அரசாங்கங்களையும் நாடுகளையும் பாழாக்கி அவர்களையும் பள்ளிகள் பள்ளிகளெனக்கூறிப் பலவகையாலும் பாழ்படுத்தி விட்டார்கள்.

சகடபாஷையில் வைசியன், சூஸ்திரனென்றும், திராவிடபாஷையில் வணிகன் வேளாளனென்றும் வகுத்திருந்தத் தொழிற்பெயர்களுக்கு சாதிகளேற்படுத்த வழி இல்லாததால் திராவிட பாஷையிலுள்ளப் பெருந் தொகையினரை வேளாளரென்று சொல்லிவரும்படிக் கற்பித்துவிட்டு தானியங்களை மரக்கால்களில் நியாயமாக வளர்ந்து வாணிபஞ்செய்வோர்களுக்கு நியாயளக்கர், நியாயக்கர், நாய்க்கரென்று வழங்கிவந்த வியாபாரிகளுக்குள்ள பெயரை மலையனூரானென வந்து நந்தன் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்ட பப்பிரபாஷைக்காரனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தங்கள் தங்கள் பெயர்களினீற்றால் நாய்க்கர், நாய்க்கரென்னுந் தொடர்மொழிகளை திருமலை நாய்க்கன், குருமலை நாயக்கனென சேர்த்து வழங்கச்செய்து வியாபாரத் தொழிலில் ஒரு பொருளைக்கொடுத்து மறுபொருளை இரட்டித்து வாங்குகிறவர்களுக்கு ரெட்டிகளென்றும், பலசரக்குகளை சிதராது செட்டுசெய்து காப்போர்களை செட்டிகளென்றும் வழங்கிவந்த தொழிற்பெயர்களை முத்துரெட்டி, முத்துச்செட்டி என்னும் சாதிகளாக்கியும், புருசீகவேஷப் பிராமணர்களாகியத் தாங்கள், குண்டாச்சாரி, பீட்மாச்சாரி திம்மாச்சாரி, என்றும் திராவிடர்களுக்குள் வேஷமணிந்துக்கொண்டவர்கள் குண்டையர், புட்டையர், திம்மையரென்றும், மராஷ்டக பாஷையில் பிராமண வேஷம் அணிந்துக்கொண்டவர்கள் குண்டரெள, புட்டோரெள, திம்மாரெளவென்றும், கன்னடபாஷையில் பிராமணவேஷம் அணிந்துக் கொண்டவர்கள் குண்டப்பா, பட்டப்பா, திம்மப்பா என்றும் வழங்கும் ஏதுக்களைச் செய்துக்கொண்டார்கள்.

இத்தகையத் தொடர்களை சகல பாஷைக்காரருள் பெருந்தொகையினர் சேர்த்துக்கொள்ளாது வழங்கியது கண்டு சிற்றரசர்களைக்கொண்டு ஒவ்வோர்