பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

658/அயோத்திதாசர் சிந்தனைகள்


மாளவதேசத்திற் சேர்ந்த ஆரியவேஷப்பிராமணர்கள் சோகெனென்னும் மன்னனை அடுத்து அவனது காமியவிச்சைக்கு உடன்பாடாகி சகல போதனைக்குள்ளும் வயப்படுத்திக்கொண்டார்கள். அதனை உணர்ந்த சங்கத்து சமணமுநிவர்களும், விவேகமிகுத்தவர்களும் அரசனையடுத்து யாது மதி கூறினும் விளங்காது வேஷப்பிராமணர்களின் பொய்ப்போதங்களையே மெய்யென நம்பி மதோன்மத்தனாயிருந்துவிட்டான். சமணமுநிவர்களைப் பாழ்படுத்துவதற்கு இதுவே நல்ல சமயமென் றுன்னி வேஷப்பிராமணர்கள் யாவரும் ஒன்றுகூடி ஆலோசித்து அரசனுடைய முத்துமாலையைக் கொண்டுபோய் அறப்பள்ளியில் வீற்றிருக்கும் சமணமுநிவர்களது ஓலைச் சுருட் பேழையில் ஒளித்துவைத்துவிட்டு முத்துமாலையைத் தேடுங்கால் வேஷட்பிராமணர் அரசனை அணுகி ஐயா, தங்களது தேசத்தில் சங்கத்தோர் முநிவர்கள் என சொல்லிக்கொண்டு திரிகின்றார்களே அவர்களையே மிக்கக் கள்ளர்களென்று சொல்லுகின்றார்கள். அனந்தம்பெயர்கள் வாக்கினாலும் கேழ்விப்பட்டோம். ஆதலின் தாங்கள் அவர்கள் வாசஞ்செய்யும் இடத்தை சோதிப்பீர்களாயின் யாதார்த்தம் வெளிப்படுமென்று வேவுகர்களை விடுக்கத் தக்க ஏதுவைத் தேடிவிட்டார்கள்.

வேவுகர்களும் வேஷப் பிராமணர்களின் போதனைக் குட்பட்டு நூற்றிச் சில்லரை சமணமுநிவர்கள் வீற்றிருந்த வித்தியோதன அறப்பள்ளியில் நுழைந்து ஓலைச்சுருளுங் காயாசமும் வைத்துள்ளப் பேழைகளை சோதிக்குங்கால் அரயனது முத்துமாலை அகப்பட்டது. வஞ்சகமற்ற சமணமுநிவர்களோ திகைத்து நின்றுவிட்டார்கள். அவர்களுள் விவேகமிகுத்தவர்களோ இஃது வேஷப்பிராமணாள் சத்துருத்துவச் செயலென்றறிந்துகொண்டார்கள்.

வேவுகர்களோ மன்னனது முத்துமாலைக் கிடைத்தவுடன் அக்கால் அவ்விடமிருந்த அறுபத்தேழு சமண முநிவர்களையும் சிறைச்சாலையில் அடைத்துவிட்டு முத்துமாலையைக் கொண்டுபோய் மன்னனிடம் காண்பித்து சங்கதியை தெரிவித்தார்கள். மன்னனும் தனது செங்கோல் நிலைதவறி காமியத்தில் ஆழ்ந்துயிருந்தவனாதலின் யாதொன்றையுந் தேற விசாரியாது கள்ளர்களைக் கழுவிலேற்றிவிடுங்கோளென்று ஆக்கியாபித்தான், இவற்றை அறிந்த வேஷப்பிராமணர்கள் பழயக் கழுவேற்றிகளை அநுபுவதாயின் பயந்து அவர்களை ஓட்டி விடுவார்கள், முநிவர்களென்றறியா மூழைகள் சிலருக்கு அவ்வேலையைக்கொடுத்தால் அஞ்சாமல் முடித்துவிடுவார்களென்னும் எண்ணத்தால் தங்களை மெய்ப்பிராமணர்களென்றெண்ணி மயங்கியுள்ள அவிவேகிகளைக் கொண்டு சமணமுநிவர்களை கழுவிலேற்றும்படி செய்து விட்டார்கள். அவர்களுள் எழுவர் சித்து நிலைக்கு வந்துள்ளவர்களாதலின் அவர் கண்களுக்குத் தோன்றாது மறைந்துவிட்டார்கள்.

சமணமுநிவர்களில் எழுவர் மறைந்து போய்விட்டதை கண்ட வேவுகர்கள் அரசனிடந் தெரிவிக்காது வேஷப்பிராமணர்களிடஞ் சென்று நடந்த வர்த்தமானங்களைக் கூறி யாது செய்வோமென்று திகைத்துநின்றார்கள்.

இதன்மத்தியில் புத்ததன்மக் குடிகளுக்கும், உபாசகர்களுக்கும் சமணமுநிவர்களைக் கழுவிலேற்றிய சங்கதிகள் தெரிந்து இவைகள் யாவும் வேஷப்பிராமணர்களால் நடந்த பாவங்களென்றறிந்து வேஷப்பிராமணர்கள் எங்கெங்கிருக்கின்றார்களோ அவர்களை அடித்துத் துரத்துங்கால் அரசனிடஞ்சென்று அபயமிட அரசனும் படைகளை அழைத்துக் குடிகளை அடக்கும்படி ஆரம்பித்தான்.

படைகளுக்கும் சமண முநிவர்களைச் செய்துள்ள பாபச்செயல் தெரிந்து அவர்களது கைகளிலுள்ளக் குண்டாந்தடிகளாலும், அம்புகளாலும் வேஷப் பிராமணர்களையே வதைத்து ஊரைவிட்டோடும்படிச் செய்துவிட்டார்கள். அரசன் ஆழ்ந்து விசாரிக்காது சமண முநிவர்களைச் செய்தப் பாவச் செயல்களைப் பின்னிட்டுணர்ந்து ஆற்றலற்ற உன்மத்த நிலையை அடைந்தான்.

இவ்வகையாக வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்கள் சென்ற இடங்களில் தங்களது பொய்வேஷங்களையும், போதகங்களையும்