பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25 / அயோத்திதாசர் சிந்தனைகள்


தனக்குள்ள நல்லெண்ணம்போல் மற்றவர்களுக்கும் இருக்கும் என்று எண்ணி தனதபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கின்றார் போலும். ஐயங்காரர் மீது ஐயங்காரர்களுக்கு நம்பிக்கைக் கிடையாது. ஐயர்கள்மீது ஐயர்களுக்கு நம்பிக்கை கிடையாது. இவ்வகை ஒற்றுமெய்க் கெட்டுவாழும் சுயப்பிரயோசன சோம்பேரிகளைக் கலைக்ட்டர்களுடன் கலந்துவிட்டால் அவர்களுடைய சுத்த எண்ணங்களும் கெட்டு குடிகளின் சுகங்களும் அற்று சுயப்பிரயோசன சோம்பேரிகள் சுகம் பெற்றுவிடுவார்கள்.

இவ்வகை அபிப்பிராயங்களை நமது கருணை தங்கிய இராஜாங்க ஆலோசனை சங்கத்தார் ஏற்காது கலைக்ட்டருக்குள்ள அதிகாரங்களை இன்னும் பலப்படுத்துவதுடன் சாதிபேதம் இல்லா சுத்தயிதயம் உடையவர்களுக்கே கலைக்ட்டர் உத்தியோகங் கொடுத்துக்கொண்டு வருவார்களாயின் சகல குடிகளுஞ் சுகம்பெற்று வாழ்வார்கள். நமது கருணாகரமேனோனவர்களும் இதையே அனுசரித்தல் வேண்டும்.

பிரிட்டிஷ் கலைக்ட்டர் அதிகாரமும் கிறிஸ்டியன் மிஷநெறிகள் கலாசாலைகளும் இல்லாமல் பலசாதி மெம்பர்கள் அதிகாரத்தில் மேனோனவர்கள் வாசித்திருப்பாராயின் இப்போது கொடுத்துள்ள அபிப்பிராயத்தை அப்போது மறந்தும் பேசமாட்டாரென்பது திண்ணம், திண்ணமேயாம்.

- 1:47; மே 6, 1908 -


13. ஆங்கிலேய அரண்மனை உத்தியோகஸ்த்தர்காள் ஜாக்கிரதை ஜாக்கிரதை

சுயப்பிரயோசன சுதேசிகள் தோன்றி ஆங்கிலேயர் அரண்மனை உத்தியோகங்களை விட்டு விடுங்கோளென்றும் பூமியை உழுது பயிரிடுங்கள் என்றும் உங்களுக்குப் போதித்து வருவதாகத் தெரிகின்றோம்.

அவர்களுடையப் போதனைகளை நம்பி மோசம்போகாதீர்கள். இந்த சத்துருக்களுடைய இடுக்கங்களுக்குப் பயந்து நெட்டாலுக்குப்போய் சீவித்து வருகிறவர்களுக்கும் சீவனங்கெட்டிருக்கின்றது. இத்தகைய சீவன விருத்திகளையும் சத்துருக்களின் மித்திரபேதங்களையும் உணராமல் சுதேசீயம் சுதேசீயம் என்னும் சுயப்பிரயோசனக்காரர்களின் வார்த்தைகளை மெய்யென்று நம்பி மோசம் போவீர்களானால் உங்களுக்குப் போதித்துக்கொண்டே (தொழுக்கட்டை) சட்டத்தை ஏற்படுத்த யோசிக்கின்றவர்கள் துரைகள்வீட்டு உத்தியோகங்களை விட்டு நீங்கி பூமிவேலைக்குப் போய் பழய சத்துருக்களிடந் தொங்குவீர்களானால் கோலுங் குடுவையும் கொடுப்பதுடன், கழுமரங்களை நாட்டி வழுவிய வஞ்சங்களெல்லாந் தீர்த்துக்கொள்ளுவார்கள்.

பாப்பானுக்கு மூப்பான் பறையன் கேள்ப்பாரில்லாமற் கீழ்ச்சாதி ஆனானென்னும் பழமொழியுண்டு. அது சாத்தியமே. ஆதலின் இத்தேசத்தோர் போர்த்திருக்கும் பொய்ச்சாதிப் போர்வைகளை நீக்கிவிட்டு பார்ப்பான் பெண்ணைப் பறையனுக்கும், பறையன் பெண்ணைப் பார்ப்பானுக்கும் கொடுத்து பார்ப்பான் வீட்டு வாரிசை பறையன் வீட்டிற்கும், பறையன் வீட்டுவாரிசை பார்ப்பான் வீட்டிற்கும் பரிமாறிக்கொள்ளுவார்களானால் அக்காலந்தான் உங்கள் சத்துருத்துவம் விலகியதென்று எண்ணல் வேண்டும். அங்ஙனம் எண்ணுவதற்கும் சற்று சந்தேகமே.

அஃதேதென்பீரேல் - கல்வி மிகுத்த பாப்பார் தங்கள் விவேகமிகுதியால் பாப்பானுமில்லை பறையனுமில்லை எல்லோரும் மனிதசாதி என்றே வெளிவந்தபோதிலும் கல்வியற்ற செம்புத்தூக்கும் பார்ப்பார்கள் வெளிவந்து பாப்பாத்திக்கும் பறையனுக்கும் பிறந்தபிள்ளை தாப்பாள்சாதி என்றும், பறைச்சிக்கும் பாப்பானுக்கும் பிறந்த பிள்ளை நொறைச்சாதி என்றும் வகுத்து இன்னோர் மநு அதர்ம்மசாஸ்திரம் எழுதினாலும் எழுதிக்கொள்ளுவார்கள். ஆதலின் ஆங்கிலேயர்களாகும் துரை மக்கள் செய்துள்ள நன்றியை