பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 / அயோத்திதாசர் சிந்தனைகள்


விளக்குவதுடன் இஸ்பென்சர், ஒக்ஸ், பெஸ்ட், பென்னி, அசயில பரதேசிகளால் உண்டாகும் பல சுகங்களையும் பரக்க விளக்கி புத்தகருபமாக்கி பிரசுரித்திருப்போமென்பதே.

அங்ஙனமின்றி சுதேசீய சுகத்தை நாடிய விவேகமிகுத்த பெரியோர்களும் கலாசாலை சிறியோர்களும் கலக்கமுறுவதைக்கண்டே கவலையுற்று சுதேசி மறுப்பகற்றி திருத்தமெழுதி வருகின்றோம்.

அவ்வகை சீர்திருத்த வாக்கியங்களில் ஒருமனிதன் தவறி கிணற்றில் விழுந்தானென்றால் சகலரும் ஏற்றுக்கொள்ளுவர். அங்ஙனமின்றி தானே விழுந்தானென்றால் அதனிலையை அன்னோர் சார்பினரே தெரிந்துக் கொள்ளல் வேண்டும்,

பரோடா அரசனும் ஜப்பான் சக்கிரவர்த்தியும் சுதேசீய செயல்களை மறுத்து மதிகூறியுள்ளப் பிரசங்கங்களையும் வரைந்துள்ள பத்திரிகைகளையும் பார்வையிட்டிருப்பரேல் யாமெழுதிவரும் சீர்திருத்தம் மறுப்பா அன்றேல் விருப்பா என்பது வெள்ளென விளங்கும்.

சுதேச சுகத்தை நாடும் நாம் நீண்ட விரோதத்தால் சுதேசியத்தை நிலைநிறுத்தல் கூடுமோ ஒருக்காலும் கூடா.

நீண்ட சாந்தமும் நீடிய சமாதானமும் சுதேசியத்தை நிலைபெறச் செய்து நித்திய சுகத்தைத் தருமென்பது சத்தியம்.

- 1:16; அக்டோபர் 2, 1907 -

சீரதுதிருத்தம் செய்யிற்றே வருத்துணைகொண்டுருஞ்
சீரதுதிருந்தச் செய்யில் தேசமுஞ் சிறப்பை யெய்துஞ்
சீரது திருந்தச் செய்யில் செய்தொழில் விருத்தியாகுஞ்
சீரது திருந்தச் செய்யில் செல்வமு மிகுதியாமே.
அவசரச் செய்கையாவு மாற்றலற் றவதிசெய்யும்
அவசரச் செய்கையாவு மாருயிர்க் கெடுதியாகும்
அவசரச் செய்கையாலே யருந்தொழிற் பாழேயாகும்
அவசரச் செய்கை முற்று மழவது திண்ணமாமே.
அந்தணர் நூற்ரும் அறத்திற்குமாதியாய்
நின்றது மன்னவன்கோல்.

அதாவது சத்திய தருமத்தைப் போதிக்கும் நூற்களுக்கும் தருமச் செயல்களுக்கும் முதன்மெயாக நிற்பது அரசர்களின் செவ்வியக்கோலென்று கூறியிருத்தலால் கருமச் செயல்களின் மீதும் அவர்கள் செவ்வியக் கோலிருத்தல் அவசியம். அங்ஙனம் நாமவர்களின் செவ்வியக்கோலைத் தழுவாது கொடுங்கோலுக்கு எதிர்நோக்கி கோதாட்டொழிற் புரிவதில் கொண்டுங் குறைவேயாம். கொண்டுங் குறைவாவதைக் கூட்டுதலினும் என்றும் நிறைவாவதே ஏற்ற சுகமாம். என்றும் சுகத்தை நாடுஞ் சீர்திருத்தக்காரர்களாகிய நாம் எல்லோர் சுகத்தையும் நாடி இதஞ்செயல்வேண்டும். எல்லோர் ஈடேற்றமுங் கருதி யீகைபுரிதல் வேண்டும்.

பிறர்நலங்கருதி பாடுபடும் பிரமுகர்களை நந்தேயத்திற் காணவேண்டுமாயின் நூற்றிற்கு ஒருவரோ இருவரோ காணலரிது. ஒருவர் குடியை உயர்த்திக்கொள்ளுவதற்கு நூறு குடிகளைப் பாழாக்குவது நந்தேயத்தோர் சுவாபம். இத்தகைய அநுபவத்தார் வெளிவந்து சகலர்களையுஞ் சீர்படுத்துகிறோம் என்றால் சருவக்குடிகளுஞ் சற்றேறப்பார்க்கின்றார்கள்.

அரசர்களின் கோரப்பார்வையாலும் குடிகளின் ஏறப்பார்வையாலும் எடுத்தவிஜெயம் ஈடேறுமோ, ஒருக்காலும் ஈடேராது என்பது சத்தியம்.

எங்ஙனமென்னில் ஓர் சீர்திருத்தக்காரன் வெளிவந்து பிரசங்கிக்குங்கால் சிலக்கூட்டத்தார் செவியில் நாராசங் காய்த்து விட்டதுபோல் (யீனப்பறையர்களேனும்) என வாய்மதங் கூறலை மற்றொருவன் கேட்டு (யீனப் பாப்பார்களேனும்) என மறுத்துக் கூறுவானாயின் ஒற்றுமெய் நிலைக்குமோ ஒருக்காலும் நிலைக்கா.

பெரியோர்கள் பிழைப்பட கூறுவரோ பிறழ்ந்துங் கூறார், நயம்படக்கூறி நானலம் பிறப்பர்.