பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மீது போடுகின்றீர்களே சுதேசிய சல்லாக் கிடைக்கவில்லையா என்று பிரசங்கித்தாராம்.

அந்தோ! இப்பிரசங்கியார் வஞ்சம் வெள்ளைக்காரர்மீதுள்ளதா அவர்கள் சல்லாவின் மீதுள்ளதா. அன்றேல், பறையர்கள் மீதுள்ளதா. இதனந்தராத்தம் விவேகிகளுக்கே பரக்க விளங்கும்.

பறையன் எனும் மொழி பறை - பகுதி, யகர மெய் - சந்தி, அன் ஆண்பால் விகுதியாகக் கொண்டு பறையனென்பதில் வாய்ப்பறையடிப்பவனும் பறையன், தோற்றையடிப்பவனும் பறையனாக விளங்குகிறபடியால் பிரசங்கியாருக்கு அதனுட்பொருள் விளங்கவில்லை போலும்.

விளங்கியிருப்பின் யதார்த்த சீர்திருத்தக்காரர் ஏனைய சோதரரை இழிவு கூறுவரோ, இல்லை இல்லை, பிரரவங்கூறும் பேதை நிலையால் இவர்களை சுதேசநலம் கருதுகிறவர்கள் என்று எண்ணாது சுயநலம் கருதுவோர்கள் என்று எண்ணுகிறார்கள்.

பட்சபாதமின்றி பலர் பிரயோசனம் கருதி பாடுபடுவது சத்தியமாயின் பயிரங்கப் பிரசங்கங்களில் பறையர்களென்போரைத் தூற்றி பழியேற்க மாட்டார்கள்.

- 1:21; நவம்பர் 6, 1907 -

பழியை ஏற்று பாவத்துக்கு உள்ளாகும் காட்சியைக் காணவேண்டில் விழுப்புரத்துண்டாகிய வியசனமே போதுஞ் சான்றாம்.

காரணம் பழிக்கும் பாவத்திற்கும் மதத்துவேஷமும் சாதித்து வேஷமுமேயாம்.

இந்துக்களும் மகமதியர்களும் வாசஞ்செய்யும் வீதிகளில் கிறீஸ்து சுவாமிகளைக் கொண்டு வந்தால் என்ன, கிறிஸ்தவர்களும் இந்துக்களும் வாசஞ்செய்யும் வீதிகளில் மகமதியர் சுவாமியைக் கொண்டுவந்தால் என்ன, மகமதியர்களுங் கிறீஸ்தவர்களும் வாசஞ்செய்யும் வீதிகளில் இந்துக்கள் சுவாமியைக் கொண்டுவந்தால் என்ன. தத்தம் மதமே மதம். தத்தம் சுவாமியே சுவாமி என்று போற்றி மற்றோர் மதத்தைத் தூற்றி அதனால் சீவிப்பவர்கள் ஆதலின் ஒருவர் சிறப்பை மற்றவர் பொருக்கா மதத்துவேஷத்தால் மீளாசினமுற்று மண்டையோடு மண்டை உருளும்படி நேரிடுகின்றது.

இத்தியாதி கேடுகளுக்குஞ் சாதி பேதங்களே மூலமாகும். நமது தேசத்தின் தற்கால பழக்கம் பிச்சை ஏற்பவன் பெரியசாதி, பூமியை உழுபவன் சின்னசாதி, பணமுள்ளோன் பெரிய சாதி, பணமில்லான் சிறியசாதி, உழைப்புள்ளவர்கள் சிறியசாதி சோம்பேறிகள் பெரியசாதிகள் என்று சொல்லித் திரிவதுடன் தங்கள் தங்கள் சீவனோபாயங்களுக்காய் ஏற்படுத்தி உள்ள மதங்களுக்கு சார்பாயிருந்து வேண்டிய உதவி புரிபவர்கள் யாரோ அவர்கள் யாவரும் உயர்ந்த சாதியார்கள், தங்கள் சீவனங்களுக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கதை யாவும் கற்பனை என்றும் பொய் என்றும் கூறி யார் புறக்கணிக்கின்றார்களோ அவர்கள் யாவரும் தாழ்ந்த சாதியாரென்றும் வழங்கிவருவது சகஜம்.

மதத்தைக்கொண்டுஞ் சாதியைக் கொண்டும் சீவனஞ்செய்யுங் கூட்டத்தார் பெருந்தொகையாய் இருக்கின்றபடியால் சாதிகளுஞ் சமயங்களுமற்று தேசஞ் சீர்பெறப்போகிறதில்லை. இத்தேசத்தோர் சாதியையுஞ் சமயத்தையும் எதுவரையில் துலைக்காமல் இருக்கின்றார்களோ? அதுவரையில் தேசம் ஒற்றுமெய் அடையப்போகிறதும் இல்லை. இவர்களுக்கு சுயராட்சியங் கிடைக்கப்போகிறதும் இல்லை. சுயராட்சியமும் சுதேச் சீர்திருத்தமும் அடையவேண்டுமானால் இத்தேசத்தின் சுயமார்க்கம் எவை என்றறிந்து அதன்மேறை நடப்பார்களாயின் சுதேச சீர்திருத்தம் உண்டாகி சுயராட்சியமுங் கிடைக்கும்.

சீர்திருத்தங்களுக்கு மூலம் எவை என்று உணராமல் அன்னியதேச சரக்குகளை வாங்கப்படாது என்று (பைகாட்) பண்ணுவதினால் சுதேசஞ் சீர்பெறுமா. இவ்வகைக் கூச்சலிடுஞ் சுதேசிகள் உங்கள் சுவாமி எங்கள்