பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 37

யாதோ பகுத்தறிய வேண்டியதே.

- 1:30; சனவரி 8, 1908 -

பாய்காட் நிலைப்பதற்கு சுதேச ஒற்றுமெயும், சுதேச ஐக்கியமும் இல்லை என்பது அடியிற் குறித்துள்ள கனவான்களை கனயீனஞ் செய்துள்ளக் காரணமே கரியாம்.

சிலர் தென்னிந்தியாவில் மட்டும் சாதிப் பிரிவினைகளுண்டு வட இந்தியாவில் இல்லை என்று கூறுவதைக் கேட்டுள்ளோம். அதற்கு மாறாக வட இந்தியாவிலும் சாதிப் பிரிவினைகள் உண்டு என்பதை அவர்கள் சாதிக்கட்டினால் விளங்குகின்றது.

இவ்வருடம் நடந்தேறிய காங்கிரஸ் கமிட்டியில் கலகஞ்செய்தவர்கள் யாவரையும் சாதிக் கட்டிட்டு நீக்கவேண்டும் என்று ஓர் கூட்டமும் இயற்றியுள்ளார்களாம். அந்தோ! இதுதானே நாஷனல் காங்கிரஸ். இது தானே சகலரையும் ஒற்றுமெய் அடையச் செய்யுங் கூட்டம். இதுதானே இந்தியர்களை ரட்சிக்குஞ் சங்கம். இவ்வகை சாதிக்கட்டுள்ள சங்கத்தை சகலரும் நிதானிக்க வேண்டியதே. காரணம் இதுவரையிலும் நாஷனல் காங்கிரஸ் என்று கூடிவந்த கூட்டம் வாஸ்தவ நாஷனல் காங்கிரஸா அன்றேல் சாதி காங்கிரஸா என்பதேயாம்.

நமது இந்தியர்களுக்குள்ள இத்தகையச் செயல்களால் கவர்னர் ஜெனரல் கர்ஜன் வாக்குபலிக்கும் போலும்.

அமிர்தபஜார் பத்திரிகையோர் அபிப்பிராயம்.

இவ்வருஷம் நடந்த காங்கிரஸில் கலகம் நேரிட்டது நல்லதென்றும் கலகம் பிறந்தாலே நியாயம் பிறக்கும் என்றும் அபிப்பிராயப்படுகிறார். அவ்வபிப்பிராயம் அவலமேயாம்.

எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாமென்னும் பழமொழியை உணராமல் பிரிவினையும் கோபமும் பொறாமெயும் கட்சியும் ஏற்படுத்தும் கலகத்தை நோக்குவதால் காரியம் நிலைக்குமோ.

கூடுங் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் கலகமே பெருகுமாயின் பிரிட்டிஷ் கவர்னமென்டாரே முன்னின்று தடுத்து நியாயம் விசாரிக்கும்படி நேரிடும். இவ்வகை நியாயம் விசாரிப்போர் முன் சென்று எங்களுக்கு சுயராட்சியம் வேண்டும் என்றால் என் சொல்லுவார்கள்.

பத்திராதிபர்களே, பகுத்தறியவேண்டியது தான். அவசர கோலம் அள்ளித் தெளிப்பது போல் அவரவர் மனப்போக்கில் அபிப்பிராயங்களை கூறுவதால் அங்கங்கு வாசிப்பவர்களின் கட்சி தடிப்பேறி ஆவேசமுண்டாய் சுதேசிய பற்றுக்களும் அற்று சுயமுயற்சியுங் கெட்டு உமக்கென்ன நமக்கென்ன என்று ஒதுங்கிவிடுவார்கள். இவ்வகை ஒதுங்குவதினால் உத்தேசம் நிலைபெறுமோ ஒருக்காலும் நிலைக்கா. ஆதலின் ஒவ்வோர் பத்திராதிபரும் நம்தேயம் ஒற்றுமெயிலும் ஒழுக்கத்திலும் சீர்பெரும் உபாயத்தை ஓதிவருவார்களாயின் உத்தமம் உத்தமம். அன்றேல் அதமமே.

திலகரைச்சார்ந்தவர்களுக்கு ஜாதிபிரஷ்டமும் கோஷுக்கு அவமானமுமா.

இவ்வருஷம் சூரத்தில் நடந்த காங்கிரஸ் சூரத்தாகவே விளங்குகின்றது.

காரணம் - கனந்தங்கிய கோஷவர்களை கணநாயகராக நியமித்தவர்கள் கூட்டத்தோர்களே அன்றி அவர் தானே நியமித்துக் கொள்ளவில்லை.

அங்ஙனம் சங்கத்தோரால் நியமிக்கப்பட்டு ஆசனம் வகித்தும் அச்சங்கத்தோர் அபிப்பிராயத்தால் திலகரின் (அமென்ட்மென்டை) அடக்கி இருப்பார் அன்றி அவர் சுய அபிப்பிராயமாகா. அவர் சுய அபிப்பிராயமாயின் அங்ஙனமுள்ள அவர் கட்சியாரே தடுத்து ஆமோதித்து இருப்பார்கள்.

இவ்வகை நோக்கங்களை சீர்தூக்கிப்பாராமல் பெரியோர் பிரஸிடென்டை தூஷித்த சுருதி கொண்டு டாக்டர் கோஷவர்கள் டிரேயினில் போகுங்கால் பத்து பனிரெண்டு வயதுள்ள பையன்கள் கூடிக்கொண்டு அவரை