பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இல்லாமலும் துற்கந்தம் மிகுத்தோர்களைத் தங்கள் வீடுகளில் சேர்த்துக் கொள்ளுவதும் பால், தயிர் கொண்டுவர வேண்டிய ஏவல் புரிவதுமாகியச் செயல்களில் வைத்துக் கொள்ளுகின்றார்கள். மற்றும் மலைவாசிகளாயிருந்து பூனை, நரி, ஓணான் முதலிய செந்துக்களைப் புசித்துக் கொண்டு நாகரீகமற்ற அசுத்தநிலையுள்ளவர்களைத் தங்கள் வீடுகளில் தாராளமாக நுழையவுஞ் சகல ஏவல்புரியவும் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இத்தேசத்துள் நூதனமாகக் குடியேறியுள்ளப் பராய சாதியோர்களால் பறையர் பறையர் என்று அழைக்கும்படியானவர்களோ பெரும்பாலும் பயிரிடும் வேளாளத் தொழிலாளரும் அரண்மனைத் தொழிலாளருமாய் இருப்பார்களன்றி வேறு மிலேச்சத்தொழில் கிடையாது.

இத்தகைய சுத்ததேகிகளை கிராமங்களில் சுத்தசலம் மொண்டு குடிக்கவிடாமலும், அம்பட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலுந் தடுத்து இவர்கள் சுகத்தைக் கெடுப்பதுமல்லாமல் இவர்கள் உத்தியோகத்திற்குச் செல்லுமிடங்களிலுஞ் சத்துருக்களாயிருந்துக் கெடுத்துவருவதையும் நாளுக்குநாள் உணர்ந்தும், தங்களை தலையெடுக்கவிடாமல் செய்பவர்களை சத்துருக்கள் என்று எண்ணாமல், மித்துருக்களாகவே எண்ணி தங்கள் கஷ்டசீவனங்களையுஞ் சுகசீவனமாக நடத்திவருகின்றார்கள்.

அதன் காரணம் யாதெனில், தங்கள் சற்குருவாகிய புத்தபிரான் போதித்துள்ள நீதி நெறிகளில் பகைகொண்டவர்களை பகையால் வெல்லலாகாது, சாந்தத்தால் வெல்லலாமென்றும், பொறாமெய் கொண்டவர்களைப் பொறாமேயால் வெல்லலாகாது, அன்பால் வெல்லலாம் என்றும் போதித்துள்ளபடியால் அப்போதனையை சிரமேற்கொண்டக் குடிகள் யாவரும் இவ்வாயிரத்தி ஐந்நூறு வருஷகாலமாகப் பகைப் பொறாமைகளைப் பெருக்கிக்கொள்ளாமல் சாந்தமும் அன்பையுமே பெருக்கிக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

மற்றுஞ் சிலர் வாசஞ்செய்யும் கிராமங்களில் வேஷ பிராமணர்கள் வந்துவிடுவார்களானால் அவர்களை அடித்துத்துறத்திச் சாணச் சட்டியைக் கொண்டுபோய் உடைப்பது வழக்கம். அவ்வழக்கமானது பகையாலும் பொறாமெயினாலுஞ் செய்வதல்ல. தங்கள் புத்தசங்கங்களையும் அரசாங்கங்களையும் தன்மகன்ம குருபீடங்களையும் அழித்துத் துன்பஞ் செய்தவர்கள் இக்கிராமத்துள்ளும் வந்து இன்னுமென்னத் துன்பஞ் செய்வார்களோ என்னும் பீதியாலும் இவர்கள் இத்தேசத்துள் வந்து குடியேறியது முதல் ஞானமும் வானமுங் குன்றி தேசம் சீரழிந்து வருகிறபடியாலும் இக்கிராமத்துள் இவர்கள் வருவதினால் தற்காலம் இருக்குஞ் சொற்ப சுகமுங் கெட்டுப் பாழாகி விடுவோமென்னும் எண்ணத்தினாலுமேயாம்.

இத்தகைய பகையும் பொறாமெயுங் கொள்ளாது சாந்தமும் அன்பையும் பெருக்கிக் கொண்டுவருங் குடிகள் இதே நிலையில் இருக்க மாட்டார்கள். அதாவது, மகாஞானிகள் வகுத்துள்ள நீதிவாக்கியத்தின்படி தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்படுவதற்கும் உயர்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்படுவதற்கும் ஓர் காலம் வரும். ஆதலின் இத்தென்னிந்தியாவில் பறையர் என்று தாழ்த்தப்பட்டப் பூர்வக்குடிகள் ஓர்கால் உயர்த்தப்படுவார்கள் என்பது, சத்தியம். அவ்வகை உயர்த்தப்படுங்கால் தங்களைக் காலமெல்லாந் தாழ்த்தி நிலைகுலையச் செய்தவர்களை அவர்கள் தாழ்த்தி துன்பஞ் செய்யாவிடினும் அவரவர்கள் செய்துவந்த தீவினைகள் தங்களையே சுட்டுப் பாழாக்கிவிடும்.

அவ்வகையாகத் தங்கள் தீவினை தங்களைச் சுட்டுப் பாழாக்குவதற்குமுன் தங்கள் தங்கள் நல்வினையைப் பெருக்கி சகலசாதியோரையுஞ் சகோதிர ஒற்றுமெயில் நெறுக்கி ஆதரிப்பார்களேல் சுதேச கல்வியும் சுதேசக் கைத்தொழிலும் சுதேசச் செல்வமும் பெருகி சுதேச சிறப்புண்டாகுங்கால் சுயராட்சியந் தானே நிலைக்கும். அங்ஙனமின்றி சாதிபேதம் என்னும்