பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 49


தெரியாதது போல் இருக்கின்றார்கள். காரணம் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங் கருதியேயாம். இத்தகைய சுயப்பிரயோசனங்கருதுவோருக்கு சுதேசியம் என்பதும் ஓர் கேடாமோ, இன்னும் படவேண்டியதும் பாடாமோ விளங்கவில்லை.

1816 வருஷத்திலும் 1821 வருஷத்திலும் தொழுக்கட்டையின் தண்டனை ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே. ஆனால் அக்காலத்தில் இருந்த குடிகள் அவற்றைக் கவனிக்காமல் இருந்துவிட்டார்கள். அதனினும் அக்காலமோ தட்டிக்கேட்க ஆளில்லாது தம்பி சண்டப்பிரசண்டகாலம். தற்காலமோ, புத்தமார்க்கம் வெளிவந்த பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு காலம். இத்தகைய நீதியும் நெறியும் நடுநிலையம் வாய்ந்த ராஜாங்கத்தில் தாழ்ந்த சாதிக்கோர் சட்டமும் உயர்ந்த சாதிக்கோர் சட்டமும் பிறக்கக்கூடுமோ, ஒருக்காலுங் கூடா.

உயர்ந்த சாதி என்னும் காலமுந் தாழ்ந்தசாதி என்னும் பொறாமெயும் தன்கு வாசித்தவர்களிடம் இருக்குமாயின் கல்வியற்றக் கசடர்பால் எவ்வளவிருக்கும் என்பதை பொது சீர்திருத்தக்காரர் கவனிக்கவேண்டியதேயாம்.

இவ்வகையான சீர்திருத்தங்களை ஒருவருக்கொருவர் விரோதமின்றி ஐக்கியமடையத்தக்க அன்பினைகளையும் கைத்தொழிற் சாலைகளையும் இயந்திரசாலைகளையும் நியமிக்காமல் குடிகளுக்கும் அரசுக்கும் விரோதத்தை உண்டுசெய்துவிட்டு எங்கள் சாதிக்கோர் சட்டம் உங்கள் சாதிக்கோர் சட்டம் இருக்கவேண்டும் என்பது விவேகிகளின் சீர்திருத்தமாமோ. இந்த ஒரு வருஷகாலத்தில் ஐரோப்பியர்களால் நடக்கும் பீரங்கியையும் பெருந்தீயை ஐந்து நிமிஷத்தில் அவிக்கக்கூடிய மருந்துங் கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

இத்தகைய அரிய வித்தைகளைக் கண்டு எல்லோரையும் ஆதரிக்க வல்லவர்களைப் பெரியசாதி என்று கூறலாமா. அன்றேல் ஊர் குடிகளைக் கெடுத்து ஊரார் சொத்துக்கு உலை வைத்து உள்ளவற்றையும் கெடுப்போர்களைப் பெரியசாதி என்று கூறலாமா. ஒவ்வொரு விவேகிகளும் இவற்றை ஆழ்ந்து ஆலோசிப்பரேல் நம்தேயத்தின் பெரியசாதிகள் என்னும் பேச்சுப் பேயநிலை என்றே விளங்கும்.

சாதிபெரிது, ஜமாத்துப் பெரிதென்று ஓர் மனிதன் வெளிவருவதைப் பார்க்கினும் வித்தை பெரிது, விவேகம் பெரிதென்று ஓர் மனிதன் வெளிவருவானாயின் அவனையே மநுகுல சிரேஷ்டரென்று கூறத்தகும்.

வித்தை, புத்தி, புகை, சன்மார்க்கம் இல்லா வீணர்கள் வாசஞ்செய்யும் நாடும் விவேகமற்றோன் வீடும் வீணே கெட்டழியுமன்றிவிருத்தி பெறாவென்பது திண்ணம்.

- 1:44; ஏப்ரல் 15. 1908 -

வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் என்னும் நான்கு சாதனங்களில்:-

பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டாம், வீணருக்கு வித்தைவரில் சொத்தையுண்டாம் எனும் பழமொழிக்கிணங்க நமது தேசத்திலுள்ளப் போலிகளிற் சிலர் பாரீசுதேசஞ்சென்று குண்டுமருந்து வித்தைகளைக் கற்றுக்கொண்டுவந்து பெண்டுகளைக் கொன்று பேரெடுத்த சொத்தைச் சொல் இவர்களது நித்தியத் தலைமுறை தலைமுறைக்குங் குலக்குறை கூறிக்கொண்டே வருவது திண்ணம்.

இதுதானோ சுத்தவீரம் இதுதானோ வித்தையைக் கற்ற புத்தி. இவர்கள் தானோ சுயராட்சியம் ஆளப்போகிறவர்கள். இல்லை, இல்லை. முதற்கோணல் முற்றுங்கோணல் என்பதுபோல் குண்டுப்போடும்போதே பெண்டுகளைப் பார்த்து சுட்ட சுத்தவீரர்கள் கையில் கத்திகளை ஏந்துவார்களாயின் வத்தலறுத்து ஊறுகாய் போடுவார்கள் என்பது நிட்சயம். இத்தகைய சுத்தவீரர்களைப் பற்றி நமது தேசத்திய தமிழ் பத்திராதிபர்களாகும் பித்தவீரர்கள் போற்றுவது யாதெனில்:-

குண்டுமருந்து கற்றுக்கொண்டுவந்து பெண்டுகளைச் சுட்டு பேலபீதவிழிக்குந் தெண்டசோற்றுராமர்களைப் போல் சுத்தவீரர் யாரும் இல்லை என்றும் அதிகாரிகள் அவர்களைப் பிடித்துக் கேழ்க்குங்கால் தாங்களே