பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 171

புகழ்ச்சி . தேற ஆய்ந்துணராது ஏற்பது யாவும் இகழ்ச்சி இகழ்ச்சியேயாம்.

- 5:15; செப்டம்பர் 20, 1911 – -


76. பௌத்த சோதிரர்களுக்கு அறிக்கை

பௌத்த தன்மப் பிரியர்களே! சோதிரர்களே! சற்று கவனியுங்கள் இந்துக்களென்போர்களுக்கும், பௌத்தர்களென்போர்களுக்கும் யாதொரு சம்மந்தமுங் கிடையாது. காரணமோவென்னில், இந்துக்களுக்குரியது இந்து மதம், பௌத்தர் களுக்குரியது புத்ததன்மம். இந்துக்களென்போருக்குப் பலவகை சாதிப்பிரிவினை களுண்டு. பௌத்தர்களுக்கு தேசப்பிரிவினையும், பாஷைப்பிரிவினையும் உண்டேயன்றி பெரியசாதி, சின்னசாதி என்னும் ஒற்றுமெய்க்கேடும் மனுக்களைக் கண்டவுடன் மனுக்கள் முறுமுறுக்கும் பொறாமெய்க்கேடும் இவர்களுக்குள் கிடையா. பௌத்தர்களை ஏதேனும் ஓர்சாதிப் பெயரால் இழிவு கூறுவார்களாயின் பிரையாதுக்கு உட்படுவதுடன் தண்டனைக்குமுள்ளாவார்கள். ஆதலின் பௌத்த சோதிரர்கள் இந்துக்களென் போருள் சைவ, வைணவ, வேதாந்திகளென்னும் பிரிவினைகள் உள்ளோர் குடும்பத்தோர்களாயிருப்பினும் நீங்கள் பஞ்சசீலம் பெற்று பௌத்தர்களானப் பின் இந்துக்களுக்குட்பட்ட சைவ, வைணவ வேதாந்திகளாயுள்ளக் குடும்பத்தோரை நெருங்கி குடும்பத்தோர்களாக பாவிக்காது அன்னியர்களாகவே பாவித்து கொள்ளல் கொடுக்கல் முதலிய சம்மந்தங்களிலுங் கலக்காமலிருக்க வேண்டியது.

அவர்களும் பராயர்கள் மதத்தை ஒழித்து சுயதன்மசீலம் பெற்று பௌத்தர்களாகி நன்மார்ககத்தில் ஒழுகுவார்களாயின் அவர்களையே தங்கள் நெருங்கிய குடும்பத்தோர்களென்றெண்ணி கொடுக்கல், வாங்கல் முதலிய சம்பந்தங்கள் செய்துக்கொள்ளவேண்டியது.

அம்மை, அவ்வை, எனவழங்கும் கிறாமதேவதை நமது பௌத்த பிக்குணியாயினும், தற்காலம் அவளைச்சார்ந்த தேவதையாகக் கோறாது காளி, கன்னிகாபரமேஸ்வரி என்னும் துஷ்டதேவதையாகக் கோறுகிறபடியால், நீங்களும் அவ்வகை சேராது, பெண்களுக்கென்னும் வேறு வியாரங்கட்டி சாந்த தேவதையை சுத்தோதயமாகப் பூசித்து அம்மன் சத்தியதன்ம திரிவாசகத்தைப் போதித்து வரவேண்டியது.

சாதி வித்தியாசத்திற் குட்பட்ட சில பராயசாதியார் தாங்களும் பௌத்தர்களென வேஷமிட்டுக்கொண்டு யதார்த்த பௌத்தர்கள் மத்தியிற் பிரவேசித்து சத்திய தன்மத்தை மாறுபடுத்துவதுடன் அவர்களையுங் கெடுத்து முன்னேறாதிருக்கும் ஏதுக்களைச் செய்துவருகின்றார்கள். அத்தகையப் பராயசாதியோர் கூட்டத்திற் பிரவேசியாமலும் அவர்கள் போதனைகளைக் கேளாமலும் இருக்கவேண்டியது. சாதிபேதமில்லா கூட்டத்தோருட் சிலர் சாதிபேதமுள்ள பௌத்தர் கூட்டத்திற் சேர்ந்து தாங்களுமோர் பெரிய சாதிகளென அபிநயித்து உள்ளதையுங் கெடுக்க ஆரம்பித்துத் திரிகின்றார்கள். அத்தகைய மூதேவிகள் முகத்தில் விழிக்காமலும் அவர்கள் கூட்டுரவிற் சேராமலும் அவர்கள் வீட்டு வாயற்படிகளுள் தங்கட் படிகளை வையாமலும் இருக்கவேண்டியது.

சுய சாதியோரை சீர்திருத்தி சுயசாதியோரை முன்னேறக் கருதுவோர்கள் மறந்தும் பராயசாதியோரை சாரமாட்டார். காரணம் நாளெல்லாம் பராயசாதியோர்களால் தாழ்த்தி நலங்குலைந்திருப்பவர்கள் இப்போது அவர்களால் சீர்பெறுவோமென்று நம்புவர்களோ, ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலின் சுயசாதியோரை யதார்த்தத்தில் சீர்திருத்த முயலுவோர் சுயசாதியோர் மத்தியினின்றே சீர்திருத்தவேண்டும் அங்ஙனமின்றி பராயசாதியோர் மத்தியிற் சென்று சீர்திருத்துவரென்போர் சுயசாதியோரைக் கெடுப்பதுடன் தாங்களுங்கெட்டு சீரழிவோர்களேயாம்.

- 5:21; நவம்பர் 1, 1911 -