பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துற்கன்மங்களைச் செய்துவருவோமாயின் இப்பிறவியில் மாளாதுக்கத்தை அநுபவிப்பதுடன் கன்மத்திற்கு ஈடாய இனிபிறக்கும் பிறவியிலுந் தீரா துன்புற்று அல்லலடைய வேண்டிவருமாதலின் பௌத்தகுழாங்கள் ஒவ்வொருவருக்கும் நல்வாழ்க்கை பெற்று நன்முயற்சியினின்று நற்கடைபிடியில் ஒழுகவேண்டும் என்று போதித்துவருவதினால் பெளத்தக்கூட்டத்தார் யாவரும் நாளுக்குநாள் பெருகிவருவதுடன் நன்மார்க்கத்திலும் ஒழுகி வருகின்றார்கள்.

இந்துக்களுக்கு மாறாயுள்ள பௌத்தர்களது கூட்டம் நாளுக்குநாள் பெருகி விவேகவிருத்தியுண்டாகி சீல சேர்க்கையும் சுகசாதனங்களும் அமைந்து முன்னேறுவதைக்கண்ட இவர்களது சத்துருக்களாய இந்துக்களென்போர் மனஞ்சகியாது மற்றுஞ் சாதிபேதமில்லாக் குடிகளை முன்னேறவிடாது கெடுக்க வேண்டும் என்னும் வன்னெஞ்சங்கொண்டு ஆடுகள் நனைந்துவிடுகிறதென்று புலிகள் கட்டி அழுவதுபோல டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தப்போகின்றோம் என்னும் ஓர் கூட்டத்தோர் கூடிபணஞ்சேர்க்கப் பரிந்து திரிந்து நிற்கின்றார்கள்.

இந்துக்களென்போரில் மற்றொரு கூட்டத்தோர்வெளிதோன்றி சாதிபேதமில்லாக் கூட்டத்தோரிற் சிலர் இந்துக்களைப்போல் சைவர்களெனக் குறுக்குப்பூச்சு பூசிக்கொண்டும், வைணவர்களென நெடுக்குப்பூச்சு பூசிக் கொண்டு அவர்கள் கோவில் வாசலின் தூரநின்று சுரணைகெட்ட சாமி கும்பிட்டு தட்சிணை தாம்பூலம் பெறும் வரவு கெட்டுப்போவதுடன் வைணவர் சைவர்களென்னும் தொகையுங் குறைந்துபோய் விடுகிறதென்னும் வன்னெஞ் சத்தால் சாதிபேதம் இல்லாதோர் வாழும் சேரிகளுக்கே சென்று நீங்கள் சைவமதத்தைவிடாதீர்கள், கூடிய சீக்கிரம் உங்களைக் கோவிலுக்குள் சேர்த்துக் கொள்ளுகிறோம் கல்லையுங் கட்டையுந் தொழுதுக்கொண்டு கடைசாதியாகவே வாழ்வீர்களெனப் படாடம்பங்காட்டி அவர்கள் முன்னேறும் வழிகளைக் கெடுத்து வருகின்றார்கள். இவர்கள் தந்திரங்களை அறிந்த சிலவிவேகிகள் அவர்களிடஞ் சென்று, ஐயா இந்துசாதி பிரசங்கியாரே, இதுகாரும் சேரிக்குள் வராமலும் இவர்களைக் கண்ணெடுத்துப் பாராமலுமிருந்தவர்கள் இப்போது இவர்கள் மீது பரிதாபங்கொண்டு பிரசங்கிக்க வந்தீர்களா அல்லது எல்லவரும் பௌத்தர்களாகிவிடுவார்களாயின் தங்களது பொய் வேதங்களும் பொய் புராணங்களும் பரந்துபோமென பயந்து வந்தீர்களா என வினவில் மாறுத்திர மின்றி மறைந்து திரிகின்றார்கள்.

இவர்களது மித்திரபேத தந்திரம் ஒருவாறிக்க இந்துக்களது செய்கையை விடாதவர்களும் சாதிபேதத்தை உடையவர்களுமாகிய இருவர்கள் வெளிதோன்றி யாங்கள் பௌத்தர்களாகிவிட்டோம் மற்றவர்களையும் பௌத்தர்களாக்க வந்துள்ளோமென இரண்டு பௌத்த சங்கங்களை ஏற்படுத்திக்கொண்டு அக்கூட்டங்களில் தங்கள் சாதிசம்பந்தப்பட்ட ஒருவரேனுமின்றி சாதிபேத மில்லாமற் சேரிகளில் வாழ்ந்திருந்தவர்களையே அதில் அங்கங்களாகச் சேர்த்துக் கொண்டு நூதன பௌத்தம் பிரசங்கித்து வருகின்றார்கள்.

அவ்விருவரும் யதார்த்தத்தில் பௌத்ததன்மத்தைப் பரவச்செய்பவர் களாயின் முதலாவது தங்கள் பெண்டு பிள்ளைகளை பௌத்தர்களாக்கி யிருப்பார்கள், அதுவுங்கிடையாது. தங்கள் இனத்தோர்களையேனும் பௌத்தர்களாக்கி சீர்திருத்தியிருப்பார்கள், அதுவுங்கிடையாது. தங்கள் அண்டைவீட்டுக்காரன் அயல் வீட்டுக்காரனையேனும் பௌத்தர்களாக்கி யிருப்பார்கள், அதுவுங்கிடையாது. மற்றும் சாதியாசாரமுள்ள இந்துக்கள் என்போரையேனும் பௌத்தர்களாக்கி இருப்பார்கள், அதிலொருவனுங் கிடையாது. அவர்கள் யாவரையும் நீக்கிவிட்டு இவர்களிருவரும் எவர்களைச் சேர்த்துக்கொண்டு பௌத்தம் போதிக்கின்றார்களென்னில் சாதிபேதமில்லாமல் சேரிகளில் வாழுவோர்களையே சேர்த்துக் கொண்டு பௌத்த கூட்டம் நடாத்தி வருவது அவர்களது சட்ட புத்தகங்களே போதுஞ் சான்றாம்.

அவ்வகை சாதிபேதமில்லா சேரிகளில் வாழ்ந்திருந்தோரை பௌத்தர்களாக்கி முன்னேறச் செய்யவேண்டும் என்னும் நல்லெண்ணமும் நன்முயற்சியும் இவர்களுக்கிருக்குமாயின் சீன பௌத்தர்கள், சிங்கள பௌத்தர்கள், ஜப்பான்