பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

பேசிக்கொண்டு நாளுக்குநாள் அவனைக் கெடுக்க வேண்டிய முயற்சிகளை செய்துவந்தபடியால் அவனுக்குள் பயமுண்டாகி சென்னைக்கு வந்து இராயப் பேட்டையில் நடந்து வந்த "பறையன்" என்னும் பத்திரிகையில் அக்கிராமத்திலுள்ள ரெட்டிகளால் நேரிட்டுவருந் துன்பங்களை வரைந்து வெளியிட்டுவிட்டுப் போய்விட்டான்.
அதற்குப் பின்னிட்டும் அவனது மாடுகளுக்கும் பயிருக்கும் அந்தரங்கமான இடுக்கங்களைப் பலவகையாகச் செய்தும் கீழ்ச்சாதி மேற்சாதி என்னும் தாட்சண்யச் செயல்களினால் அக்கிராமாதிகாரிகளால் உதவியுமில்லாமல் தவித்துக் கொண்டே இருந்தவனை சென்ற டிசம்பர் மாதம் 25ம் நாள் இரவு அந்த ரெட்டிவகையராக்கள் கூட்டமாக வந்து வீடுபுகுந்து அடிக்க ஆரம்பித்தபோது தப்பித்து ஓடி ஒளித்துக்கொண்டானாம். மறுநாட் காலையில் அக்கிராம ரெட்டிவகையராக்கள் தங்கள் மாடுகளை விட்டு இராகவன் பயிறுகளை மேயவைத்ததின் பேரில் அவன் வயிரெரிந்து பயிருள் இறங்கி மாடுகள் யாவையும் பவுண்டுக்கு வோட்டிக்கொண்டு போகுங்கால் வழியில் யாருமில்லாத இடம் பார்த்து அந்த ரெட்டி கூட்டத்தார் பத்து பனிரண்டுபேர் சேர்ந்து வளைத்துக்கொண்டு அவனைத் தடிகளால் அடித்துக் கொன்று போட்டு படுபாவிகள் தங்கள் மாடுகளை ஓட்டிக்கொண்டு போவதை அறிந்தப் பிள்ளைகளும் பந்துக்களும் ஓடிப் பார்க்குங்கால் இராகவனை அடித்துக் கொன்றுபோட்டு ஓடிவிட்டார்கள். பெண்சாதி பிள்ளைகள் யாவும் கதரக் குடிகள் யாவரும் பதர அதிகாரிகளிடம் அறிக்கையிட்டு அவர்கள் வைத்திய பரிசோதனை செய்ததில் அடித்தவடிகளினாலே பரிதாபமாய்க் கொலையுண்டானென்று கண்டுகொண்டு கனந்தங்கிய போலீஸார் விசாரிணையில் வந்திருக்கின்றதாம். தற்கால மங்கு சாதித்தலைவர்கள் அதிகாரமின்றி தாசில்தாராயுள்ளவரும் மகமதிய கனவான், கேசை விசாரிணைச்செய்யும் இனிஸ்பெக்ட்டரும் இராஜபுட்ஸ் கனவான் விசாரிணைப் புரியும் மாஜிஸ்டிரேட்டும் யூரேஷியப் பிரபுவாதலால் ஏழைமக்கள் மீது பரிதாபம் வைத்து நீதியாகவே விசாரிணைச் செய்துவருகின்றதாகக் கேழ்வியுற்று ஆனந்தடைந்தோம். கூடிய சீக்கிறம் படுபாவிகள் அகப்பட்டுப் போவார்கள் என்பது திண்ணம். மற்ற சாதித் தலைவர்களே அந்த அதிகாரங்களிலிருப்பார்களாயின் அந்தக்கொலை அம்மட்டோடே அடங்கிப்போயிருக்கும். கருணைமிகுத்தவர்களும் நீதிமான்களுமா யிருக்கின்றபடியால் திண்ணமாகக் கொலைபாதகர்கள் அகப்பட்டு தண்டனைக் குள்ளாவார்கள் என்றே நம்புகிறோம்.
பராயசாதியோரால் பறையனென்றழைக்கப்பெற்ற ப. ராகவனது வம்மிஷ வரிசையைச் சார்ந்தப் பெரிய வீட்டுக்காரர்களும், பெரியசாதியோரது பெரிய புராணமே எங்களுடைய தென்போர்களும், பெரியசாதிகளின் மதமே எங்களுடைய மதமென்போர்களும், பெரிய சாதியோரின் சாமிகளே எங்கள் சாமிகளென்போர்களும் புலியைக்கண்டு பூனையுஞ் சூடிக்கொள்ளுவது போல் நெடுக்குப்பூச்சுக் குறுக்குப் பூச்சுகள் பூசி மொட்டைகளடித்து கொட்டைகள் கட்டி தாடிகள் வளர்த்து பேடிகூத்தாடிப் பிழைக்க வழியற்று தாளமத்தளமடித்து பாட்டுகள் பாடி யாங்கள் வெண்பா சிங்கம், விருத்தப்புலி, அகவல் யானை, கலித்துறைக் கரடியெனக் கையேந்தி ஊரானது சைவசமயத்தை உறுதிப்படச்செய்யப்போகிறோம். வேறானது வைணவசமயத்தை வலுப்படுத்தப் போகிறோமெனப் பட்டாங்கடித்துத்திரியும் பதங்குலைந்தவர்களே, இனத்தானான இராகவனது பரிதாபக் கொலையை நோக்குங்கள். பறையனும் பெரும் பூமி வைத்து வாழலாமா , பறையனும் சீர் சிறப்படையலாமா என்னும் பொறாமெகொண்டு படுகொலை புரிந்து வதைக்கும் பாவிகளின் செயல்களைக் கண்ணோக்கி அத்தகைய சத்துருக்களின் சாமிகளைச்சாராமலும், சத்துருக்களின் மதங்களைத் தழுவாமலும், சத்துருக்களின் புராணங்களை நோக்காமலும் உங்கள் மித்துருவாய குலகுருவாம் புத்தரது சத்திய சங்கத்தைச் சார்ந்து நீதியும் நெறியுங் கருணையுமமைந்த பிரிட்டிஷ்