பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 - சுந்தர சண்முகனார்

பெற்ற அன்றினும்

தயரதன் முடி துறக்கவும் இராமனுக்குப் பட்டம் கட்டவும் வசிட்டன் ஒத்துக் கொண்டபின், தயரதன் மிகவும் பெரு மகிழ்வு பெற்றானாம். அதாவதுமகனைப் பெற்ற நாளினும்- சீதையை மணக்க வில்லை ஒடித்த நாளினும், தம் குல எதிரியாகிய பரசுராமனை இராமன் வென்ற நாளினும்- இந்நாளில் பெரிதும் உவகை உற்றானாம்:

மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப் பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடித்த அப் பெருவில் இற்ற அன்றினும், எறி மழுவாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்

(41)

என்பது பாடல். இதில் உள்ள மகனைப் பெற்ற அன்றினும்' என்னும் பகுதி,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

என்னும் குறளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஊருணி-பயன் மரம்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டுதல் பற்றி அவை யோரின் கருத்தைக் கேட்டான். அவையோர் அனைவரும் உடன்பட்டுக் கூறியதாவது: ஊருணி நீர் நிறை தலையும், பயன் மரம் பழுத்தலையும், மழை பொழிதலையும், வயலுக்கு நீர் தரும் ஆறு நீர் பெருகுதலையும் மறுப்பவர்கள் யார்? ஒருவரும் இலர். இராமனுக்கு முடி சூட்டுதல் இவை போல் பயனுள்ள செயலாகும். எனவே மறுப்பு இல்லை- என்பதாகும். பாடல்:

ஊருணி நிறையவும் உதவும் மாடுஉயர்
பார்கெழு பயன்மரம் பழுத்தற் றாகவும்
கார்மழை பொழியவும் கழனி பாய்நதி
வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்?

(81) என்பது பாடல். இப்பாடலின் முதல் இரண்டடிகளில்,