பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 157


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (215)
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் (216)

என்னும் குறள்கள் இரண்டும் மறைந்திருப்பதைக் காணலாம்.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

இன்சொல்லும் ஈகையும் உடைய மன்னனுக்கு அழிவு இல்லை என வசிட்டன் இராமனுக்கு அறிவுறுத்துகிறான்:

இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்...... அனைய மன்னற்கு அழிவும் உண்டாங் கொலோ?

(26)


என்பது பாடல் பகுதி. இது, இன்சொல்லுடன் வேண்டியதைக் கொடுத்துக் காக்கும் மன்னனுக்கு உலகம் ஒத்து வரும் என்னும் கருத்துடைய

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு

(387)

என்னும் குறள் கருத்தைத் தன்னுள் கொண்டுள்ளது.

படைக்கலம்

வசிட்டன் இராமனுக்கு மேலும் அறிவுரை தருகிறான் சான்றோரின் ஆர்வமே (அன்பே- ஆசியே) அரசனுக்குப் படைக்கலமாகும்- என்கிறான்.

தீர்வில் அன்பு செலுத்தலின் செவ்வியோர்
ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே

(28),

என்பது பாடல் பகுதி. இது,