பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 சுந்தர சண்முகனார்



அது இயற்கைக்கு மாறான தீச் சகுனம் அல்லவா? எனவே, இதுபோல் யாரும் வாழ்த்துவதில்லை. நீங்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வீராக என்று வாழ்த்துவதுதான் முறை- இயற்கை.

திருமண அரங்கில் கோவலனுடன் இருந்த மணமகள் கண்ணகியை நோக்கிச் சிலர் பின்வருமாறு வாழ்த்தினர்: 'நீ காதலனைப் பிரியாமலும், கை கோத்த நெருங்கிய தொடர்பு தளராமலும், தீமை வராமலும் வாழ்வாயாக' என வாழ்த்தினர்.

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிராமல் தீதுஅறுக என ஏத்தி' (மங்கல வாழ்த்துப் பாடல்-61, 62)

என்பது பாடல் பகுதி. பின்னால் கண்ணகியும் கோவலனும் கவவுக் கை ஞெகிழ்ந்து பிரியப் போகிறார்கள்- தீமை வரப்போகிறது- என்பதை இந்த வாழ்த்து உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வரலாறு முழுதும் நடந்து முடிந்த பிறகு காப்பிய ஆசிரியர் இளங்கோவடிகள் எழுதியதால், பின்னால் நிகழ்ந்ததை அறிந்து முன்னோட்டமாக முன்னாலேயே எழுதிச் சுவை தந்துள்ளார். இது மட்டுமா?

மனையறம் படுத்த காதையில், கோவலனும் கண்ணகியும் இன்புற்றிருந்த வாழ்க்கையை தொண்ணுாறு (90) அடிகளால் தெரிவித்துள்ளார் இளங்கோ. இந்த தொண்ணூறு அடிகளில் நாற்பத்தைந்து அடிகள், கோவலன் கண்ணகியைப் பாராட்டிய அடிகளாகும். இந்தப் பாராட்டு எவரெஸ்ட் உச்சிக்குப் போய்விட்டிருக்கிறது. அதாவது இறுதிப் பகுதியை மட்டும் காணலாம்.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ

'