பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 - சுந்தர சண்முகனார்

நகரைச் சுற்றிப் பார்த்து வந்து, மதுரையின் சிறப்பையும் பாண்டியனின் உயர்வையும் புகழ்ந்து கூறுகிறான். இது. தொடர்பாக, அடைக்கலக் காதையில் உள்ள ஒரு பகுதி, வருமாறு:

நிலந்தரு திருவின் நிழல் வாய்நேமி
கடம்பூண் டுருட்டும் கெளரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிவிடம் புகுந்து
தீதுநீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழி (1-10):

}}


என்பது பாடல் பகுதி. பாண்டிய மன்னனின் செங்கோல் சிறப்பு இங்கே கூறப்பட்டுள்ளது. தென்னவன் புகழைக் கோவலன் வாய் வழியாகவும் கூறச் செய்துள்ளார் இளங்கோ. ஏன்?- அடுத்தாற்போல், கோவலன் செங்கோல் வளையப் போகிறது. இதை வைத்து, இதன் முன்னோடியாகப் பாண்டியனது செங்கோல் சிறந்தது என்பது கூறப்பட்டுள்ளது. இதன் குறிப்பு, அடுத்து மாறான நிகழ்ச்சி வரப்போகிறது என்பதாகும். இது போல், வழக்குரை காதையிலும் ஒரு குறிப்பு உள்ளது. வழக்கு உரைக்கக் கண்ணகி வந்துள்ளதைப் பாண்டிய மன்னனுக்கு அறிவிக்கச் சென்ற காவலன், முதலில் மன்னனை வாழ்த்திப் பின்னரே செய்தியைத் தெரிவிக்கிறான். அல் வாழ்த்துப் பகுதி வருமாறு:

வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி'

(30-33)