பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 201



மந்திரப் படலம்

அறத்தின் கொடுமை

இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று தயரதன் சொல்ல அவையோர் அனைவரும் ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து சுமந்திரன் கூறுகிறான்: மன்னா! இராமனுக்கு முடிசூட்டு என்பதை அறிந்து மகிழ்கின்ற மனத்தை, நீ நீங்கித் துறவு கொள்ளப் போகிறாய் என்று சொல்லும் சொல் சுடுகிறது. எனவே, முறையான அறத்தினும் கொடியது வேறொன்றும் இல்லை போலும் என்கிறான்.

உறத்தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தைத்
துறத்தி நீஎனும் சொல் சுடும்; நின்குலத் தொல்லோர்
மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கன்று
அறத்தி னூங்கு இனிக் கொடிதெனல் ஆவது ஒன்று யாதோ

(45)

இங்கே தயரதன் மேற் கொண்ட அறநெறியை முதலில் விளக்கி, அதன் வாயிலாகப் பின்னர், இது போன்ற நேரங்களில் அறத்தினும் கொடியது ஒன்று இல்லை என வேறொரு கருத்தை அமைத்து வைத்திருப்பது வேற்றுப் பொருள் வைப்பாம்,

பெரியவர் இயற்கை

தயரதன் இராமனை நோக்கி, நின்னைப் பெற்ற யான், இன்னும் அரசுச் சுமையால் வருந்துவது தகாது; எனக்கு நீ உதவ வேண்டும்; நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் மைந்தரைப் பெற்று, துன்பம் நீங்கி, இம்மை- மறுமை இன்பங்களைப் பெறுவது முதியோரின் இயற்கையல்லவா?

உரிமை மைந்தரைப் பெறுகின்றது உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை;

தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ?

கருமம் என்வயின் செய்யின் என் கட்டுரை கோடி

(62)