பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பதிப்பாசிரியர் குழு அமைத்துப் பல படிகளையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கச் செய்து, மர்ரே அண்டு கம்பெனி- சென்னை' என்னும் நிறுவனத் தின் வாயிலாக வெளியிட்டுள்ள பதிப்பையே, என் நூலுக்கு அடிப்படை ஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளேன்.

யான் இப் பதிப்பினைத் தேர்ந்தெடுத்ததற்கு உரிய காரணம், தமிழ் யாப்பிலக்கணம் அறியாதாரும் எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படிச் சொற்களைப் பிரித்து அமைத்துப் பதிப்பித்திருத்தலேயாகும். மற்றும், இம்மலிவுப் பதிப்பே பலராலும் வாங்கப் பட்டிருக்கலாம்; என் நூலோடு ஒத்திட்டுப் பார்க்க உதவலாம்.

மலரை இதழ் இதழாகப் பிய்த்தும் கசக்கியும் நுகர்வது பொருந்தாது என்பது அடியேனும் அறிந்த செய்தியே. இருப்பினும், எல்லோரும் படித்து இன்புறும்படி இப்படியொரு பதிப்பும் இருக்கலாமே! யாப்பிலக்கண வல்லுநர்கள் சுவைக்கும்படியாக வேறு சில பதிப்புகள் உள்ளனவே! அவர்கட்கு அவை சாலும்.

அடியேனைத் தூண்டி நூல் எழுதச் செய்த திரு அ. அருணகிரி அவர்கட்கும் மற்ற சுவைஞர் கட்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன். இந்நூலை அன்புடன் நன்முறையில் வெளியிட்ட வானதி பதிப்பகத்தார்க்கு என் பெருநன்றி உரியது. வணக்கம்.

சுந்தர சண்முகன்