பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உட்பிரிவு

வால்மீகி தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குச் சருக்கம் என்னும் பெயர் ஈந்துள்ளார்; கம்பர் தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குப் படலம் என்னும் பெயர் தந்துள்ளார். கம்பரின் அயோத்தியா காண்டத்தின் உட்பிரிவுகளாகிய பதினான்கு படலங்களின் பெயர்கள் வருமாறு:

1. மந்திரப் படலம்
2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
3. கைகேயி சூழ்வினைப் படலம்
4. நகர் நீங்கு படலம்
5. சுமந்திரன் மீட்சிப் படலம்
6. தயரதன் மோட்சப் படலம்
7. கங்கைப் படலம்
8. குகப் படலம்
9. வனம்புகு படலம்
10. சித்திர கூடப் படலம்
11. பள்ளி படைப் படலம்
12. ஆறு செல் படலம்
13. கங்கை காண் படலம்
14. திருவடி சூட்டு படலம்.

இனி, இப்படலங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் சுருக்க அறிமுகம் வருமாறு:—

1. மந்திரப் படலம்: தயரதன், ஆசான் வசிட்டர், அமைச்சர்கள் ஆகியோருடன், இராமனுக்குப் பட்டம் கட்டுவது பற்றிச் சூழ்ந்த மந்திராலோசனை பற்றியது.