பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


கற்பனைக் காட்டாற்றில் சொற்பயனை மிதக்கவிட்டு, சாதியைக் கழுத்தறுத்து, நீதியை நிலை நாட்டினார் பாரதி:

அவர் உள்ளுணர்ச்சியை ஊதியணைக்கப் புறப்பட்ட புயல் வெள்ளையன் சட்டத்திலேயிருந்து பிறந்தது!

கவிதையால் அறப்போர் ஆற்றத் தொடங்கிய அவரை - அடக்கு முறையெனும் மறப்போரால் வென்றிட முயன்றது ஆங்கில ஆட்சி!

ஆனாலும், அவரது பாட்டெழுதும் உணர்வு ஒட்டம் மட்டும் நின்றபாடில்லை, தளர்ந்த பாடில்லை. பாரதியார் நாடி ஏற்றுக் கொண்ட கொள்கை, குறிக்கொள், மக்கள் நெஞ்சமெனும் வெற்றித் திருநகரில் காலடி வைக்கின்ற வரையில், அவர் சொத்தையாக - சோடையாக - சோரம் போனவராக - சோர்வுடையவராக மாறாமலே பாடிப்பாடி போராடினார்!

அதனாலே, அவரது பாட்டுக்கள், மென்மேலும் நெய் பெய்யப்பட்ட நெருப்புப்போல - உணர்வுத் தீயை ஊர் ஊராகக் கொளுத்தின - பரப்பின!

அவரது கீதங்கள் - சிலருக்கு வழிகாட்டிகளாக அமைந்தன! தேச பக்த நல்வழியிலே தேக்கமற்று நடந்தார்கள் - மக்கள்!

பாரதியார் பாடல்கள், சிலருக்குச் செவியைக் கொடுத்தன. அவர்கள் - உணர்ச்சியைக் கேட்க ஆரம்பித்தார்கள்!

சிலருக்கு நாவைக் கொடுத்தன. அவர்கள்- தமிழ்ச்சுவையை வீரமாகச் சுவைக்க ஆரம்பித்தனர்.

சில கவிதைகள் - சிலருக்குப் புதிய பிறப்பையே தந்தன. அவர்கள் தங்களது பழைய பிறவியினையே மறந்தார்கள்!

ஆங்கில வேட்டாட்சிக் காட்டுத் தர்பார்

காலூன்றி இருந்த இந்தியாவை, விடுதலைக்கு

இலக்காக்க, அவர் மட்டுமல்ல, பாரதியின்

உயிர்த் தோழர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளை,

சுப்பிரமணிய சிவா, திரு.வி.க. மற்றும் பலரும் -

பால கங்காதரத் திலகர் பாதையிலே நடந்தார்கள்.

101