பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


என்பதை உணர மறந்தான் ஆங்கிலேயன்!

பாரதியாரது உணர்வுகள் - நாள்தோறும் விடுதலை பிரச்னைகளோடே விளையாடிக் கொண்டிருந்தன.

அடிமைப்பட்ட நம் மக்களுக்காக அவர் கொடுத்த அரிய செல்வங்கள், அவருடைய உழைப்பு, கடமை, நெஞ்சுரம், நேர்மையான லட்சியம், தன்னலமற்ற தேச பக்தி என்ற உணர்ச்சிகளேயாகும்.

“பாருக்குள்ளே நல்ல நாடு-இந்த பாரத நாடு" என்று, அவர் மீசையை முறுக்கிக் கொண்டு மறவனைப் போலப் பாடியபோது, கோழைகளும், ஏழைகளும் கொடி ஏந்தி ஓடோடி வந்தனர் - 'வந்தேமாதரம்' என்று!

பெருநெருப்புச் சுடரலைகளைக் கண்டு பயப்படும் மக்களைப் போல, பாரதியார் பாடிய கவிதைச் சிறு வரிகளைக் கண்டு கொதித்தான். கொந்தளித்தான் - வெள்ளையன்.

போராட்டங்களை ஒழித்து விடலாம்! - அறப்போர் மறியல் செய்வோரைத் தடுத்து விடலாம்:

ஆனால், உணர்ச்சியின் பிடரியைப் பிடித்துக் குலுக்கிக் கொப்பளித்து எழுதும் கவிஞனுடைய கவிதை வேகத்தை, சீற்றத்தை, புரட்சியை - யாரால் தடுக்க முடியும்?

காந்தியடிகளை மதித்தவர் பாரதி!"வாழ்க நீ எம்மான்" என்று பாராட்டும், வாழ்த்தும் கலந்து அவரைப் பாடிக் களித்தவர்.

அதே காந்தி, விதவை, மறுமண வாழ்வுக்கு மாறுபட்ட கருத்துடையவராக இருந்தபோது, கொந்தளித்து எழுந்த அதே பாரதி, "ஸ்ரீமான் காந்தி பிதற்றலுக்கு என்ன அர்த்தம்?” என்று ஆவேசமாகக் கேட்டார்:

சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கு எதிரி போல காந்தி இருந்தாலும் தணல்பட்ட கந்தகம் போல் காய்ந்து பொறிந்து வெடித்தவர் பாரதியார்.

இத்தகைய மக்கள் கவிஞன் சில வேளைகளில் குயிலாகவும் பாடிக் கொண்டிருந்தார்:

சிலநேரங்களில் கந்தகக் கவிஞனாகவும் திகழ்ந்தார்; அவரது

104