பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


நாக்கும், வாக்கும் இரண்டுமே சமுதாய விடுதலை உண்மைக்காக, நன்மைக்காகவே உழைத்தன !

குயிலை வைத்துக் கொண்டு - அதன் இசையைக் கேட்பதைப் போல - தனக்கு எதிரியாக இருக்கும் கவிஞனை வைத்துக் கொண்டு - அவனது பாட்டைக் கேட்க முடியாது.

எங்கோ இருந்து காற்றிலே மிதந்து வருகின்ற இசை, நச்சுக் கருத்துகளை ஏந்தி வருமானால் - அதனைத் தடை செய்வது முடியாத செயல் அல்லவா?

எனவே, தேச பக்தி நாட்டுப் பாடல்களைப் பாடிடும் பாரதியைச் சட்டத்தால் ஓட ஓட விரட்டினான் வெள்ளையன். ஓடினார்! ஒடினார்! பாரதி ஒடியபடியே இருந்தார் - புதுவையை நோக்கி:

ஆங்கிலேயனை மீறி, விடுதலைப் பாதையில் ஏறுபோல நடக்கவே - பாரதியார், பிரெஞ்சு நாட்டின் அதிகாரத்திலுள்ள புதுவையை நோக்கி - புது வேகத்தோடு நடந்தார்:

அங்கே, வ.வெ.சு. ஐயர், அரவிந்தர், கனக சுப்புரத்தினம் என்ற பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் தொடர்பும் பாரதியாருக்கு ஏற்பட்டது.

புதுவைக்கு வந்த பின்பு - புது வாழ்வா அவர் பெற்றார்? புதுப்புது திருப்பங்களைத் தமிழுக்கு உருவாக்கப் புதிய புதிய சிந்தனைகளெனும் தேரேறி உலா வந்தார்:

பாரதியார் கவிதா மண்டலத்தை அவர் புதிதாக உருவாக்கினார்! கனக கப்புரத்தினம் என்ற பாரதிதாசனை தனது வாரிசாகப் பிரகடனப் படுத்தினார்.

தனக்குப் பிறகு - தமிழுக்குப் புதிய மொழியுணர்வு என்ற ரத்த ஒட்டத்தைப் பாய்ச்சினார்! பாரதியார் கவிதா மண்டலத்தை 'கதேசமித்திரன் என்ற நாளேட்டிலே உருவாக்கினார்.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்காக
'கலம்பகத்தில்' - புதிய முயற்சி - '
'இரட்டை மணி' மாலையில் - புதுப்பாங்கு
அந்தாதியில் - ஒரு புது திருப்பம் - 'பஃறொடையில்' - ஒரு புதுமெருகு!
உரைநடைக் கவிதை என்ற புதிய ஓர் உத்தி -

105