பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


'பாஞ்சாலி சபதம்' என்ற புதுக் கருத்தைச் சுமந்து வந்த பழைய கருத்து - இவ்வாறெல்லாம் - சிந்தனைச் சிகரமேறி, கவிதைச் சீமானாக பன்முக வித்தகத்தோடு - அவர் தமிழ்த் தொண்டாற்றினார்.

எழுத்தில் - அரிமா குரலை எதிரொலித்து, "நெற்றி சுருக்கிடேல், நினைப்பதை முடி, நன்று கருது குன்றென நிமிர்ந்து நில்,” என்ற புதிய 'ஆத்தி சூடி'யை இளைஞருக்கு ஈந்து மறு ஒளவையாரானார்!

'முனையில் முகத்து நில்' என்று முழங்கி, முளைத்த வெள்ளைப் பகையைக் குலைத்து அழிக்க, விடுதலை அறம் பாடிய மறவராக விளங்கினார் - பாரதியார்!

புதுவை நகர் புகுந்தும், அவரது விடுதலை வேட்கை காய்ந்து புல்லாகவில்லை! உதிர்ந்த சருகாகவில்லை? பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து - அங்கேயும் நெருப்பை கக்கினார் - பாடலாக - போர் முரசாக!

வெள்ளையனுடைய வேகம், அதற்குப் பிறகு சற்றுத் தனிந்தது - பாரதியார் மீண்டும் சென்னை வந்தார்!

'சுதேசமித்திரன்' நாளேட்டில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்! எழுத்துலகில் கதிரவனாக நடமாடினார்! மக்களுக்குள்ள பொறுப்பைத் தூண்டி - ஏகாதிபத்தியத்தைக் காய்ந்தார்!

விடுதலை வானத்தில் அடிமைத் தளையை அறுத்தெறியக் கவிதை பாடிப் பறந்த விடுதலைக் குயிலை, திருவல்லிக்கேணி கோயில் வேழம் ஒன்று தூக்கிப் போட்டது!1921-ஆம் ஆண்டு - அவர் காலத்தோடு கலந்தார்!

வீரனின் வாள்போல வளைந்த மீசையும்,

ஒளி படைத்த கண்ணும், உணர்ச்சி கொண்ட நெஞ்சமும், நிமிர்ந்த உடலும், குனியாத கொள்கையும் கொண்ட சுப்பிரமணிய பாரதியார், காலமெல்லாம் வறுமையோடு போராடி, சகாப் புகழ்பெற்று, தமிழ்ச்சரித்திர நிகழ்ச்சிகளில் ஒரு வீர காவியத்தின் பொன்னேடாகப் புகழ் பூத்துப் பொலிந்து விட்டார்.

வாழ்க பாரதியார் தேசிய உணர்வுகள்
வளர்க அவரது தமிழ் உணர்ச்சிகள்!

106