பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இமை மூடா
இரவுகள் சில




வானமே...!

உனது வாயிலைத் திறந்து விட்டாய் அல்லவா? எங்கே உனது பரிவாரங்கள்?

மக்கள் சந்தைக்கு நடுவில், விலை போகக் கூடிய சரக்குகள் எத்தனையோ இருக்கும்போது, விலை போகின்ற அற்பத்தனங் களைப் பார்த்திருக்கின்றாயா?

சட்டத்தை மீறுகிறவன் - சமுதாயத்தில் பஞ்ச கல்யாணி குதிரை மீது சவாரி செய்கின்றான்.

அவனுக்குப் பின்னாலே வருகின்ற பரிவாரங்கள், இறைவன் படைத்த ஜீவன்களாக இருக்கும் என்று நீ நம்புகின்றாயா?

மூளை முளைத்த மிருகம் மனிதன்! அவன் கையில் வேதாந்தம்!

அவனுடைய வாழ்தொலிகள் முழுவதும், அற்பத்தனத்தின் செவிக்கே விருந்தாக அமைகின்றன.

உனது பரிவாரமும் - அப்படிப்பட்ட இனத்தைச் சேர்ந்ததா என்றால், நான் அதைப் பார்க்க விரும்பவில்லை.இருண்டு போன தனது வீட்டை ஒளி மயமாக்கி, கடன் வாங்கி எண்ணெய் யைக் கொளுத்துகின்ற ஓர் ஏழையைப் போல, அந்த வெள்ளி வெளியே தெரிகின்றது. இதயத்தில் இரக்கம் இருக்கின்றதா என்று தேடிப் பார்ப்பதற்காக, மனிதன் எத்தனை நூல்களைப் படிக்கின்றான் தெரியுமா?

புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், அவன் வித்வானாகி விடுகின்றான்! - புலவனாகி விடுகின்றான்!

எதற்காக இதழைத் திறந்தானோ, அது அவன் கையில் கிடைப்பதில்லை.

107