பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


ஆசார விளக்கங்களை ஆற்றுகின்றான். ஆனந்த பூர்த்திக்கு வழி காட்டுகின்றான். ஆனால், இரக்கத்தை மட்டும் அவனால் இன்னும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த வெள்ளி மீன் கூட, எதையோ தேடுவதற்காகத் தன்னைக் கொளுத்திக் கொண்டது. ஆனால், இதுவரை அது கண்டுபிடித்தது ஒன்றுமில்லை.

இரக்கத்தைத் தேடிய அந்த மனிதனும் - எதையோ தேடுகின்ற இந்த வெள்ளி மீனும், இடம் மாறி இருக்கின்றனவே தவிர, தகுதியில் ஒன்றுதான்!

இப்படி, விண்மீன்களை நீ வாரி இறைக்கின்ற காரணத்தால், உனக்கு மிகத் தாராளமனது இருக்கின்றது என்று உலகம் நம்புமென நினைத்துக் கொள்கின்றாயா?

தீவுக்கு அந்தப்புறம் தீய வழியில் சம்பாதித்தவர்கள்-இப்படித் தான் வாரி இறைக்கின்றார்கள்.

நல்ல நாணயமாக இருந்தால் பரவாயில்லை. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த செல்லாக் காசுகள் அவை!

வள்ளல் தன்மை, வெளிப்படையாக உன்னைப் போல் காட்டுவதில்லை.

அறவிலை பகர்வோர் பூமியல் இருக்கின்றார்கள் என்ற - யாரோ ஒருவர் பாடி விட்டார்.

அவர்கள் வானத்திலேயும் இருப்பது, அந்தக் கவிஞனுக்குத் தெரியவில்லை போலும் போ! அவன் சிந்தனைக்கு புலப்படாத வரையில் நீயும் நல்லதுதான்.

ஏ. வானே! அந்த நிலா உன்னை என்ன செய்தது?

இருண்டுபோன உனது முகத்தைத் தெளிவாக்கி வெளியே தெரிய வைத்ததே, அதற்குத்தான் இந்த பரிசா?

எந்த வாளால் அதை இப்படி வெட்டிச் சித்தரவதைச் செய்தாய்?

பாவம் பிறையாக அதைத் தொங்க வைத்தாய்? சிதைத்தவனுக்கும் சிரித்த முகத்தைக் காட்டுகின்ற ஓர்

108