பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


உத்தமனை, அந்தப் பிறையின் முகத்திலே காண்கின்றேன் !

"கடல் உன்னிலிருந்து வந்ததா? நீ, அதிலிருந்து வந்தாயா? திருப்பி என்னைக் கேட்டு விடாதே"

'நானி'லிருந்து 'என்' வந்ததா? 'என்'னிலிருந்து 'நான்' வந்ததா?

மண்ணோரம் இருக்கின்ற இந்தப் பெருங்கடல் வாயெல்லாம் சிரிப்பு!

விண்ணோரம் இருக்கின்ற உன் வாயெல்லாம் - தீப்பிழம்பு!

என்னுடைய கடந்த கால வாழ்க்கையில், மண்ணிலே இருப்பவன் நாள்தோறும் சிரித்துக் கொண்டே மற்றவனை அடிக்கின்றான் - அழிக்கின்றான்!

ஆனால், கடல் மட்டும் சிரித்துக் கொண்டே யாரையும் அழிப்பதில்லை! ஆதற்குக் கோபம் - ஊழிக்கொரு முறை தான் வரும்! அப்போது பொங்கும் பிரளயமாகும்!

நீருக்கு இருக்கின்ற இந்த நிலை - மனித நெஞ்சுக்கு ஏன் இல்லை? நீரின் ஒழுக்குக்குக் கரை: மனிதன் வாழ்க்கைக்கு வரம்பு? விண்ணுக்குள் இருக்கின்ற இறைவனை, ஒரு சிறிய வடிவத்தில் அடக்குகின்றான் மனிதன்!

சிறிய மனித உருவத்தில் இருக்கின்ற இறைவனை, ஏன் வரிவாக்க முடியவில்லை?

வானே !
வையத்தின் குடையே !
நீ, மண்ணைப் போர்த்துகின்றாய்!
மண், என்னைப் போர்த்துகின்றது!
நான், யாரைப் போர்த்துகின்றேன்!
இந்த கேள்விகளுக்கு தத்துவஞானிகள் விடையளிக்க வேண்டும்.
பொழுது விடிந்துவிட்டது.

109