பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி



நான்காம் இரவு

விண்மீன்

ஒரு மனிதனுடைய வாழ்க்கை, அனுபவம் என்ற துணியை நெய்துவிட்டு ஓடி ஒளிகின்றது.

அவனுடைய அனுபவத்துகில், எங்கே மடித்து வைக்கப்பட்டு இருக்கின்றது?

இப்படிப்பட்ட துணி மூட்டைகள் வெளியே இருக்கும் போது, நாகரிகமற்ற மிருகமாய் மனிதன் திரிகின்றானே, ஏன்?

தாயின் இடுப்பை நழுவிக் கீழே விழுந்த சண்டித்தனம் பிடித்த குழந்தையைப் போல், ஒரு விண்மீன் வானை விட்டுப் பூமிக்கு இறங்கியது.

நெய்யற்ற விளக்கு கடருதறி அடங்குவது போல், விண்மீன் எரிந்து அடங்கிற்று.

எனக்கும் அந்த விண்மீனுக்கும், பேச்சு வார்த்தை, நடந்தது ஒரு நொடி என்றாலும், பேசியது அதிக நேரம். அதை அப்படியே எழுதுகின்றேன்.

அவசரக்காரின் ஒருவன் - ஆதாரமற்ற செய்தியைச் சொல்லும் போது, - அடித்துப் பேசுகின்றான்.

அவன் வார்த்தைகள், உண்மையால் உருவாக்கப்பட்டவை.

உள்ளத்திற்குப் படைக்கப்படும் படையலைப் போலிருந்தன.

ஆனால், உண்ட மறுநொடியே அது அஜீரணத்திற்கு அடிப்படையாக மாறுகின்றது.

வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம், நீ வானத்திலிருந்து பூமிக்கு வரும்போது, எடுத்துக் கொள்ளப்பட்ட நேரமாகும்.

செயலாற்ற வேண்டிய எதையும் - சிந்தனையாளன் சிந்திக் கும் போது, அவனுடைய நாடி நரம்புகள் அத்தனையும் சூடேறிய பிறகு மூளை பக்குவப்படுகின்றது.

இந்தக் கருத்தை மெக்காலே போன்ற மேதைகள் கூறினார்கள்.

115