பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


இருபத்தைந்துக்கு மேல், நாற்பதுக்குள், அது பணம் சேர்க்கின்ற அனுபவமாகவே இருக்கும். நாற்பதுக்கு மேல் மனித மூளை சிந்திப்பதில்லை.

உலகத்திலே உள்ள எல்லா மனிதர்களுடைய வாழ்க்கை அனுபவமும் இந்தப் பட்டியலிலே வந்து விடும்!

காதல் அனுபவத்தின் கோணங்கள் மாறலாம்!

பணம் சேர்க்கின்ற முறைகள் மாறலாம்!

சிந்தனைகள் வளராததற்குக் காரணங்கள் இருக்கலாம்!

ஆனால், எந்த வகையிலும், எல்லா வகையிலும் - எந்த மனிதனுக்கும், வாழ்க்கை அனுபவம் மட்டும் கிடைத்து விடுகின்றது.

வானின் நீளத்தையும் -
கடலின் ஆழத்தையும் -
மலைகளின் நிலையையும் -
சூரிய சந்திரர்களுடைய
கதிர் வேகத்தையும், துருவி
நோக்குகின்ற விஞ்ஞானி -
தன் அனுபவத்தை மட்டும் அறியாதபோது -
அவன்அஞ்ஞானியாகின்றான்.

நிலத்தில் விதைத்த வித்து - மறு உருப் பெறும்போதுவிளைவுகள் தோன்றுவது போல, மனிதன் தனது அனுபவத்தைச் சோதனை செய்கின்ற போது, அவனது வாழ்க்கையில் புது அனுபவத்தைப் பெற்று - பொலிவு பெறுகின்றான்.

பொழுது விடிந்து விட்டது.

117