பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புலவர் என்.வி. கலைமணி


'தமிழ்த் தாயின் தாள் மீது - கால் வைப்போர் தலைமீது என் கால் வைப்பேன்' என்ற நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார், தந்தை பெரியார், தளபதி அண்ணா உட்பட்ட பல்லாயிரவர், ஆதிக்க இந்தியை அன்று எதிர்த்தார்கள்! இதுதான் முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போர்!

தாளமுத்து - நடராசன் போன்ற மொழிப் போர் தமிழத் தன்மானிகள், தங்களது தாய் மொழிக்காக வீர மரணமடைந்து அறப் போர் தியாக வரலாறு தீட்டினார்கள்!

இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்பு போர், மீண்டும் 1965-ஆம் ஆண்டில் உருவாயிற்று.

தமிழக மாணவர் தளபதிகளான ம. நடராசன் எம். ஏ., நாவளவன், இரவிச்சந்திரன், பெ. சீனிவாசன், இன்று அரசு பணிகளில் பணியாற்றி வரும் மற்றும் பல மாணவ மணிகள் அனைவரும் எல்.கணேசன் தலைமையை ஏற்று, இந்தியைத் திணிக்கும் இரு ஆட்சிகளையும் எதிர்த்து, வியூகம் வகுத்துப் போராடினர்!

சென்னை மாநகர், இந்தி எதிர்ப்புப் போர் செங்களமானது! தஞ்சை மாநகர், வெங்களமானது.

செந்நீரைச் சிந்தும் செருமுனைந் சிங்கங்களானார்கள் - இந்தியை எதிர்த்துப் போரிட்ட தமிழக மாணவர்கள்!

செம்மாந்த தமிழர் தம் மறம், வீர வரலாற்றுச் சம்பவங்களைப் படைத்தது!

இந்த, இந்தி எதிர்ப்புப் போர்ப் பரணி, பத்து உயிர்களை நெருப்பாலும் - நஞ்சாலும் பலி கொண்டது!

பன்னூறு மக்களைத் துப்பாக்கித் துந்துபியால் துவம்சம் செய்து, நடை பாவாடை விரித்து, ஆட்சி அலங்கோலங்களால் அராஜகச் சதிராட்டமாடியது அன்றைய ஆட்சி!

அறிஞர் அண்ணா அவர்கள், 1957 - ஆம் ஆண்டு சென்னை கோட்டையிலே முதலமைச்சராகக் கொலுவீற்ற பிறகுதான், வடவர் மொழியாதிக்க உணர்வுகளான மும்மொழித் திட்டத்திற்கு அவரால் கல்லறை கட்ட முடிந்தது!

தமிழ் - ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தைச் சட்ட

121