பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


ஒவ்வொருவரிடமும் அவரவர் யோசனைகளைக் கேட்டுக் கொண்டார்கள்.

திசைக்கு ஒரு குழுவாக அறிஞர்கள் திரண்டு சென்றார்கள். நாடுகள்தோறும் நடமாடினார்கள். விடைகளைத் தேடி வித்தகர்களை நாடினார்கள். பலன்தான் இல்லை - பாவம்!

ஒருநாள் கரிகளும், பரிகளும், கோவேறு கழுதைகளும் - ஒட்டகங்களும் சுமை சுமையாய் புத்தகங்களையும், ஓலைச் சுவடிகளையும் நாணல் இதழ்களிலே எழுதப்பட்ட ஏடுகளையும் பை பையாகச் சுமந்தவாறு அராபி மன்னன் முன்பு நின்றன.

நீண்டநெடுந் தூரம் வரிசைகளாக நிற்கும் அந்த விலங்கினச் சுமைகளைக் கண்டு, மன்னன் வியப்படைந்தான்.

புருவங்களை மேலேற்றியபடியே, கண்களைக் கசக்கிக் கொண்டு மறுமுறையும் அவன் அந்த வரிசையை நோக்கினான்.

இவ்வளவு புத்தகங்களையும் படித்திட, எனக்கு ஆயுளுண்டா? இவற்றைச் சுருக்கமாக எழுதிட, மேலும் எவ்வளவு காலம் ஆகும்? கனல் பட்ட கந்தகமாய் காவலன் வெடித்தான்.

'நாளை! நாளை! நாளையே முடிக்கின்றோம்' என்று, அந்த அவை அதிர்ச்சியோடு இறைஞ்சி ஒலித்தது.

மறுநாள் கூடியது மன்றம்! மன்னவனும் மற்றோரும், மனக்கோட்டங்களோடும், மருட்சியோடும் அமர்ந்திருந்தார்கள்.

அமைதியம், அடக்கமுமான அறிவோடு, ஒரு சிறு சந்தனப் பெட்டியை இரு கைகளிலும், ஏந்தியவாறே, பயபக்தியுடன் அவையுள் நுழைந்தான் ஓர் ஞானி.

"கொற்றவா! எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் நடைபெற்ற அரிய சம்பவங்களடங்கிய சரித்திரம், இதோ இந்த சந்தனப் பெட்டியின் உள்ளே உள்ளது” என்றான் அந்த ஞானி.

பார்த்தான் பாராள்வோன். திறந்தான் பேழையை!

இளம் மான் தோலின் மேல், மென்மயிராலான மெத்தையிலே, மூன்று வரிகள் எழுதப்பட்ட சிறு காகிதத் துண்டு ஒன்று பளபளத்தது.

131