பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



மன்னனால் விபரம் கேட்கப்பட்டபோது, "அவர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள்! இறந்தார்கள்!" என்று எழுதப்பட்ட மூன்று வரிகள்தான் அந்தப் பேழையில் இருந்தன.

வெட்கத்தால் வேந்தன் வியர்த்துப் போனான். ஊமையாய் அந்த ஞானியின் இரு கைகளையும் பற்றி, மாறி மாறி முத்த மாரி பொழிந்தான்.

அந்த அரசவையே அகம் சிலிர்த்து, மெய் மறந்து கையொலி எழுப்பியது!

அரிய இந்த அற்புத அறிவுச் சம்பவத்தைப் படித்த கருணையே உருவான உமாயுன், களி கொண்டான். தன்னையே மறந்த உணர்வால், அறிவால், நூலகத்தை விட்டு இறங்கி வரும்போது, படிக்கட்டுகளிலே அவன் கால்கள் இடறி விட்டன.

தடுமாறித் தடுக்கி விழுந்தான். மாமன்னன் உமாயூன் "அல்லா” என்றபடியே, பாவம்!

132