பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


வானவில்லில் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு மலரை அல்லது தாவரத்தைச் சுட்டி, அவற்றின் இயல்புகளையெல்லாம் ஒரு தாவரவியல் அறிஞர் சொல்வதுபோலச் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.

'மாதவி' ஒரு கொடி (குருக்கத்திக் கொடி) அதைச் சொல்ல முற்பட்டதும், அதைப் பயிரிடவேண்டிய முறை, அதன் பூ இலை அமைப்பு, இலக்கியத்தில் அது பெற்றுள்ள இடம், ஆகிய அனைத்தையும் கூறிவிடுகிறார்.

“மாதவிக் கொடியை கன்னட மொழியிலும் மாதவி என்றே அழைப்பர். ஒரிய மொழியில் அதனை 'மாதபி' என்றும், மாதபிளதோ என்றும் கூறுவர்

தாவர நூலறிஞர்கள்.அதனை ஆங்கிலத்தில், மாட பிளோட்டா என்று அழைக்கின்றனர்' என அரிய பல செய்திகளை இடையிடையே சொல்லி நம்மை வியக்க வைக்கிறார் நண்பர் கலைமணி.

வேங்கைப்பூ என்றதும்-"மறத்திற்கு இலக்கணமான புவியின் பெயரை ஒரு மரத்திற்குச் சூட்டி, மரத்தின் மாண்பை மேதினிக்குப் பரப்பிய நாடு தமிழ்நாடுதானே தம்பி” என்கிறார். மரம், மறம் ஆகிய இரு சொற்களும் இத்தொடரில் ஒரு தனி அழகையே பெறுகிறது எனலாம்.

"அண்ணாவின் தலைமையிலே துவங்கிய இயக்கம், வீரம் விளைந்த தமிழ் நிலத்தில் தோன்றியது என்பதை மட்டும் மறந்து விடாதே தம்பி! அவரது கட்சி ஒன்றுதானே வேங்கையைப் போல் வீரம் பொருந்திய பாசறையாக விளங்கியது. அந்தக் கட்சியின் வீரத்திருஉருவமாக - தன்னேரிலாத வழிகாட்டியாக - அண்ணா காட்சியளித்தா” என அண்ணாவை வேங்கைப் பூவாகவும், கட்சியைவேங்கை மரமாகவும் கலைமணி சொல்லும் அழகே அழகு!

'அண்ணா ஒரு கடல்' - கட்டுரைத் தலைப்பு கடலைப் பற்றிய அரிய பல செய்திகள் இதில் அலை மோதுகின்றன. கடலடியில் கடற்செடிகள். அவை மீன்களுக்கு உணவாகின்றன. அச்செடியின் தண்டைப் பிளந்து பார்த்தால் உள்ளே வெதவெதப்பு எப்படி வந்தது?

13