பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்

"எழு பிறப்பு" என்ற ஆய்வு நூலுக்கு, அணித் தலைவராகத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி அவர்களும், டாக்டர் இரா.சாரங்கபாணி எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி, வித்வான் வை.இரத்தினசபாபதி பி.ஓ.எல்., எம்.ஏ., மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர், ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி - வேங்கடசாமி, வித்வான் வி.பி.நடராசன் ஆகியோர் உறுப்பினர்களாக இணைந்து எழுபிறப்பு பற்றி ஆய்வு நடத்தியிருக்கின்றார்கள். இவ் விழாவில் அடிகளார் ஒருவர்தான் வரத் தவறிவிட்டார்.

"சான்றோர் யார்?’ என்ற ஆய்வு நூலுக்கு, இராவண காவியம்' ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள் - அணித் தலைவராகவும், பேராசிரியர் புலவர் ம.நன்னன் எம்.ஏ., பேராசிரியர் மோசசு பொன்னையா எம்.ஏ., காவல்துறையைச் சார்ந்த சு.மி. டயசு ஐ.பி.எஸ், டி.ஐ.ஜி, பேராசிரியை சாரதா நம்பியாரூரான் எம்.ஏ. சோம. இளவரசு ஆகியோர் அணி உறுப்பினர்களாக சேர்ந்து, சான்றோர் யார்? என்பது பற்றி ஆய்வு செய்திருக்கின்றார்கள்.

"திருவள்ளுவர் கிறித்துவரா?” என்ற ஆய்வு நூலுக்கு அணித்தலைவராக டாக்டர் மெ. சுந்தரம் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி, அவர்களும், பேராசிரியர் க.த. திருநாவுக்கரசு எம்.ஏ., (தமிழ்) எம்.ஏ., (வரலாறு) எம்.லிட், டாக்டர் இராம.பெரிய கருப்பன் எம்.ஏ. (வரலாறு) எம்.லிட், டாக்டர் இஸ்ரவேல் எம்.ஏ, பிஎச்டி, புலவர் க.வெள்ளைவாரணனார், பேராசிரியர் எழில் முதல்வன் எம்.ஏ., ஆகியோர் அணி உறுப்பினராக அமர்ந்து, திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற நூல் பற்றி ஆய்வு நடத்தியிருக்கின்றார்கள்.

இறுதியாக இரண்டு நாட்களிலும் திருக்குறளார் வீ.முனுசாமி பி.ஏ.பி.எல், சிறப்பு விருந்து ஆற்ற இருக்கின்றார்கள்.

இந்த மாநாடு, 1962, மே-3, 4ஆம் நாட்களில், எண் 3 எல்டாம்சு சாலையிலே உள்ள கிறித்துவ கலை - தொடர்பு நிலையத்தின் அரங்கத்தில், அரங்கத் தலைவர் அருட்திரு. சா.கவிசேஷ முத்து பிடி, எம்.டி.எச், அவர்கள் மேற்பார்வையில் நடைபெறுகின்றது.

150