பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


திரு. புலவர் தெய்வநாயகம் அவர்கள், அய்யன் திருவள்ளுவரைக் கிறித்துவர் என்கிறார்.

அதற்கு ஆதாரமாக ஆறு ஆய்வு நூல்களைத் தீட்டியுள்ளார். அதற்காக நடைபெறுவதே இந்த ஆய்வு மாநாடு!

முத்தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வித்தகருமான, இந்த திருக்குறள், ஆய்வு மாநாடு வெற்றிகரமாக நடைபெற, என்னுடன் இணைந்து அல்லும் பகலும் அயராது உழைத்த எனது அருமை குடும்ப நண்பர், கவிஞர் முருகு வண்ணன் அவர்களுக்கு எனது நன்றியைக் கூறிக் கொண்டு எனது வரவேற்புரையை இங்கே ஆற்றுகின்றேன்.

இந்த ஆய்வரங்கம், திருக்குறளுக்கு ஏற்பட்ட சோதனை என்றோ அல்லது வேதனை என்றோ - எவரும் எண்ண வேண்டாம்.

திருக்குறளை யாத்த நமது திருவள்ளுவர் பெருமானுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டு காலத்தில், இத்தகைய தொரு வேற்று மதச்சவால், இன்று வரை ஏற்பட்டதில்லை.

புலவர் தெய்வ நாயகத்தாலும், கிறித்துவ மதப் பிற பிரிவுகளாலும் ஒர் இக்கட்டான சூழ்நிலை சூழ்ந்துள்ளது. அந்த சவாலை ஏற்று இங்கே நாம் கூடியுள்ளோம்.

திருக்குறளைத் தொட்டு பொருள் கொண்ட மனம், இந்தப் நொடிப் பொழுது வரை உலகில் பிற்க்கவில்லை.

திருக்குறள் ஒரு மத நூலாயின், அந்நூலின் பொருள் உணர்ந்து, வரிக்கு வரி விளங்காமல் போனாலும் - நம்பிக்கைக் கொண்டு இப்பிறவி தப்பித்தால் போதும், வேறோர் பிறவி கிட்டாதா என்று ஏங்கித் தவிப்போர்போல் இருந்துவிடலாம்!

திருக்குறள், வாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள் அத்தனைக்கும் எப்படி வளைத்துப் பொருள் காண்பது என்பதற்குரிய ஒர் அகராதி!

குறள், பிறந்த நாள் முதல் - இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை. எந்த உரையாசிரியருடைய நூலை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவரவர் விருப்பு, வெறுப்பு, தன்னலம்,

151