பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


இந்தியாவிலே இருக்கின்ற ஏழெட்டு மதங்களுக்குச் சொந்தக்காரனாகவோ அல்லது பெத்தலகேமிலிருந்து புறப்பட்ட ஒரு மதத்துக்குச் சொந்தக் காரனாகவோ, அய்யன் திருவள்ளுவரை 1962 - ஆம் ஆண்டில் நீங்கள் நிர்ணயித்து விட்டால் கி.பி. மூன்றாயிரத்தில் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

அப்போது என்ன மதம் வருகின்றதோ - எந்த இனம் வருகின்றதோ, யாருக்கு என்ன தெரியும்?

இதுவரையில் எழுதிய குறள் உரையாசிரியர்கள், தங்களது பாடையைப் பார்த்துக் கொண்டு எழுதினார்கள். அவர்களுக்குப் பின் யார் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

தன் கருத்தே எதிர் காலக் கருத்தென்று நினைப்பது, பொருள் மாற்ற விஞ்ஞானத்தை அறியாதவர்களின் செயல்.

பொருள் பீறிட்டு வேகமாக மாறுகின்ற போது - மனிதன் மட்டும் மாற மாட்டானா? காலச் சுழற்சி அல்லவா அது?

நேற்றைய கருத்தே இன்றைய கருத்து என்று கூறுவதற்குப் புது வருடம் எதற்காக? காலண்டர் ஏன்?

உங்களைத் தமிழ்நாடு கேட்பதாகவே நினைக்க வேண்டும். மணல் வீடு கட்டிக் கொண்டு, திருமணமே என்னவென்று தெரியாத குழந்தைகள் கேட்கின்றன.

அவர்களது தமிழ்நாடு முக்கடலையும் கடந்து, அமெரிக் காவையும் கடந்து செல்லலாம்.

ஏன், குறிப்பாகச் சற்றுத் தாண்டிச்சொல்கிறேன்.அவர்களின் தமிழ்நாடு, இராக்கெட்டின் துணையால் கோள் வட்டங்கள் வரை ஊடுருவலாம்.

பிறக்கின்ற செடிகளுக்கு நீங்கள் விதைகள் போகின்றவர்கள். இந்த நல்ல காரியத்தில் விதைகளாகச் சாகுங்கள்.

இனம் புரியாமல், அநீதியை நோக்குகின்ற குழந்தைகள், திருவள்ளுவரை நோக்கட்டும்.

புலவர் தெய்வநாயகம், தனது பெரு முயற்சியை, சிலுவை வழியாகத் திருக்குறளைப் பார்க்கச் செலவிட்டிருக்கிறார்.

157