பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


இது தேவையா - தேவையில்லையா என்பதை - மதம் பிடிக்காதவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரந்து நோக்கின் தத்துவத்தில் நாம் வளர்ந்தவர்கள்.

நமது திருக்குறள், எல்லோருக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒருவருக்கே அது உரிமையாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சைவத்தின் கருத்து, வைணவத்தின் கருத்து, சமணத்தின் கருத்து, பெளதத்தின் கருத்து இசுலாமியத்தின் கருத்து, கிறித்துவர்களின் திருக்குறளிலே இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு மதத்திற்கும் அது சொந்தம் என்று கூறும் துணிவுடையோர் இன்னும் பிறக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

ஏனென்றால், திருவள்ளுவரது சிந்தனை - கருத்து வண்ணங்கள் - இதுவரையில் ஆய்வு நிறக் கலையில் தேர்ந்தவனுக்கே தடுமாற்றத்தைத் தருகின்றது.

திருக்குறள் என்பது ஒரு வண்ண ஜாலம்! நாத மர்மம்! கருத்துச் சூழல் சிந்தனை மயக்கம்! அறிவின் சோதனை தேர்வு பெற முடியாத தேர்தல் குறி பார்த்தடிக்க முடியாத குறி.

விஞ்ஞான ஆய்வுக்கே ஏற்பட்ட பெரலட்டிக் - அதாவது பாரிசவாய்வு!

மேலும், ஒரு படி தாண்டிச் சொல்லப் போனால், மனிதன் உரை எழுதித் தெளிவு பெற வேண்டிய நூலல்ல - திருக்குறள்!

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவன் - இனி பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கின்றேன்! ஏனென்றால், உரைகள் கலவரத்தில் முடிகின்ற காரணத்தை வைத்து,

அய்யன் திருவள்ளுவருக்குப் பின் வந்த ஆராய்ச்சி நூல்கள், பொருள் விசாரணை நூல்கள், மனோதத்துவ நூல்கள், விஞ்ஞான நூல்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த ஒருவன் கூட - திருக்குறளுக்கு நேரிடையாகப் பொருள் கூற முடியவில்லையே - ஏன்?

ஏனென்றால், தமிழுக்கு உயிர் நூல்களை எழுதிய

158