பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


மதுரை மாநகரில் சந்தித்து இலக்கிய விளக்கம் கேட்டார். வ.உ.சி.

அதற்குப் பதில் கூறிய சண்முகனார், 'எந்த ஒரு நூற்பாவையும் 'நிரல் நிறை'யாகக் கொள்ள வேண்டும்' என்றார்.

"உ ஊ என்ற இரண்டும் ந, வு என்ற இரண்டோடும் சேராது"

"உ, என்பது, 'ந' வோடு மட்டும் சேர்ந்து, 'நு' என்று மட்டும் சொல்லின் இறுதியிலே வராது என்றார் சண்முகனார்!

"ஊ" என்பது, 'வ' வோடு சேர்ந்து 'வூ' என்று மட்டும் சொல்லின் இறுதியில் வராது.

"அதனால், கதவு, பணர்வு. உணர்வு, தளர்வு" என்ற சொற்களிலே உள்ள 'வு' சொல்லின் இறுதியில் வரலாம் என்றே தொல்காப்பியர் அனுமதித்துள்ளார். 'களவு ' என்பது சங்க கால இலக்கிய வழக்காறுகளையும் தாண்டி, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள ஒரு சொல்.

"எனவே, இவ்வாறே பொருள் காணவேண்டும் என்று வித்தகர்கள் எழுப்பிய தடைகளுக்கு விடை விளம்பி உடைத்தெறிந்தார் - சண்முகனார்.

எனவே, மனிதன் என்பவன் எந்த நூலை எழுதினாலும், படித்தாலும், கேட்டாலும், மாசிலா மனமுடையவனாக இருந்தால் தான், எதை அவன் கேட்கிறானோ, அதன் உண்மைப் பொருளைக் காண முடியும்.

இவ்வாறான மறை பொருட்கள் திருக்குறளிலும் உண்டு!

அவற்றை ஆழ்ந்து கூர்ந்து, ஒர்ந்து படிக்க வேண்டிய பொறுப்பு தமிழறிவுடையார் கடமை அல்ல - உரிமை !

தமிழ்மொழியில் அத்தகைய சங்ககால நான்மறைகளும், தமிழ் மறைகளும், திருமந்திரங்களும், பாசுரங்களும், அறச் சொற்களும் ஏராளமாக உள்ளன. அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டுமானால், அதாவது, மனிதன் மனம், முழுக் முழுக்க ஒன்றும் இல்லாமல் மாறினாலொழிய, தன் நெஞ்சில் ஒரு துளியும் மதக் கருத்து, சாதிக்கருத்து, நாகரிகக் கருத்து, பண்பாட்டுக் கருத்து இல்லாமல் மாறினாலொழிய, திருக்குறளுக்கு உண்மைப் பொருளைக் காண முடியாது.

160