பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


சீடராக்கி மகிழ்ந்திட அமெரிக்கப் பணமழையின் ஒருமைப்பாட்டோடு பணிகளாற்றுமா?

திருக்குறளுக்கு உரை கண்ட தொல்லாசிரியர்களான காளிங்கருக்கோ, மணக்குடவருக்கோ, பரிமேலழகருக்கோ, பிறருக்கோ இப்படிப்பட்ட விவாத மன்றங்கள் இன்று வரை கூடினவா?

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், மொழி நூலறிஞர் பண்டித தேவநேயப் பாவாணர், திருக்குறள் பீடம் அழகரடிகள், திருக்குறளார் வீ. முனிசாமி, கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்க பிள்ளை, புலவர் குழந்தை, சாமி சிதம்பரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரது குறட் புலமைக்குக் கூட இத்தகைய ஆய்வரங்கம் இன்றுவரை ஏற்பட்டதில்லையே!

புலவர் தெய்வநாயகம் அவர்களுடைய ஆறு புத்தகங்களுக்கு ஏற்பட்ட இந்தப் பெரும் வாய்ப்பைக் காணுகின்ற நேரத்தில், மத ஒற்றுமை எவ்வளவு பலமாக, ஒருமைப் பாட்டுணர்வோடு, தனது மதத்தைப் பரப்பப் பணியாற்றுகின்றது என்பதுதான் தெரிகிறது.

இருந்தாலும் - இந்த நேரத்தில் இதே கிறித்துவ அன்பர்களும் தமிழ் அடிமைகளே - கால்டுவெல்லைப் போல - ஜி.யூ. போப்பைப் போல - வீரமாமுனிவரைப் போல!

கிறித்துவக் கண்ணோட்டம் திருக்குறளைப் பார்ப்பதினால் வேறொரு கோணத்தில் நோக்கும் போது, தமிழுக்கு உயர்வே கிட்டுகின்றது - அதை நாம் மறக்க முடியாது.

காலத்துக்குக் காலம் முப்பட்டை கண்ணாடி வழியாக ஊடுருவும் சூரியனைப் போல, ஒளிக்கற்றைகளை வீசுகின்ற திருக்குறளுக்கு, இருபதாம் நூற்றாண்டில் தெய்வநாயகம் ஒரு பிரச்சினையாக வந்தாரே தவிர, குறளால் வாழ்பவர்கள் - புது உரைகளை - விளக்கங்களை - மத சார்பற்றுக் காணவில்லை - காணாததற்கு அவரவர் மதம் தான் தடுக்கின்றதா?

இப்படிப்பட்ட ஐயப்பாடுகளுக்கு இந்த மாநாடு ஒரு தீர்வு காண வேண்டும் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

162