பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


மேடைகளைவிட - இது ஆபத்தான கருத்தரங்கம் என்பதைப் புரிந்தீர்களா?

மதமே கூடாது, என்பவனும், மதமே தேவை என்பவனும் திருவள்ளுவன் அல்லன். இவன் இரண்டுக்கும் இடையே, மலைக்கு நடுவே ஓடுகின்ற அருவி.

பொதுவாகப் பார்ப்பவன் மனிதனானான் - குறிப்பாகப்பார்ப்பவன் மதவாதியானான்.

'செரிக்காத ஆசைகளை வைத்திருந்தவன் சொர்க்கத்தை நாடுவது வாடிக்கை” என்றான் கார்ல் மார்க்ஸ்!

“தேவையான ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்பவன், திராணியுள்ள மனிதன் என்றான்- ஏஞ்சல்ஸ், ஆனால், அய்யன் திருவள்ளுவர்- மனக் கலவரத்திலே ஈடுபட்டு தன்னைத் தாக்குப் பிடிக்காதவர்களுக்கே திருக்குறள் செய்தார்.

மனம், என்ன என்பதை விளக்குவதற்குப் பதில், திருவள்ளுவர் அதிலிருந்து தப்பிப்பதற்குரிய வழிகளைச் சொன்னார். "மனத்தின் கண் மாசிலனாதல்" என்ற நிலையை உருவாக்க நினைத்தார்:

மனம் என்றால் என்ன என்பதைக் கூறிய பிரான்ஸ் நாட்டுத் தத்துவவாதிகளான ஆல்ஃபிரைட் கேமு வைவிட, ஜீன்பால் சாத்தேயைவிட, தப்பிக்க முடியா மனத்திலிருந்து, தப்பிக்க வழி கூறிய ஒரே ஒரு தத்துவவாதி - அய்யன் திருவள்ளுவரே!

வெறும் டைலக்ட்டிகல் அனாலிசஸ் என்று சொல்வார்களே, அதைத் அய்யன் திருவள்ளுவர் செய்யவில்லை.

அப்படிச் செய்திருந்தால், அவன் பாமர மக்களிடையே வந்து சேர்ந்திருக்கமாட்டான் - படித்தவர்களிடையே சென்று குவிந்திருப்பான்.

மனம் உள்ளவரை மாச்சர்யங்கள் உண்டு. அதன் அடிப் படையில் ஒழுக்கங்களைக் கற்பிப்பது இமாலயப் பிரச்சினை.

'நீங்கள் வெறுமனே இருங்கள்'("Be in nothingness") என்று கூறுவதற்குப் பிரெஞ்சு நாடு காத்திருக்கிறது.

ஆனால், 'எண்ணங்கள் உள்ளவரைதான் மனிதன்', என்ற

164