பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


கொள்கையை யார் கூறியிருக்க முடியும்?

கடவுள் தேவையில்லை என்று கருதிய மக்கள் யாராக இருந்திருப்பார்கள்? தாங்கள் சிந்தித்ததைப் பயமின்றிக் கூறியவர் யார்?

அவர்கள், அக்காலத்தில், உலகின் மற்றைய பாகங்களில் நிலவி இருக்கின்ற எல்லா நாகரிகங்களையும் விட உச்ச நிலை பெற்றவர்கள் ஆவார்கள்.

அக்கால நாகரிகச் சமுதாயத்தில், அவர்கள், விவசாயத்தைக் கொண்டு, ஒரு நிலை பெற்ற வாழ்க்கையை அமைத்து - உலகைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருந்தார்கள.

இவ்வாறு வாழ்ந்த சிந்தனையாளர்களைத்தான்-"ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை உடையவர்கள்" என்று சிந்துவெளி நாகரிகம் கூறுகிறது.

இந்த சமுதாய அம்சத்தில் உருவான அய்யன் திருவள்ளுவர், எப்படி ஏற்கனவே அறிந்து தேய்ந்து போன மும்மைக் கொள்கையை, வரவேற்றிருப்பார் என்பதை - தமிழறிஞர்களாகிய நீங்கள் உங்களது ஆய்வுரையில் சிந்தித்து, எமது சிந்தனைக்கும் விடை கூறிட வேண்டுகின்றேன்.

பேரன்பு படைத்த தமிழ்ப் பேரறிஞர் பெருமக்களே! திருக்குறள் ஆய்வு மாநாட்டில் குழுமியிருக்கின்ற அறிவாளர்களே, உங்களை இவ்வளவு நேரமாக எதையெதையே கூறி, காலத்தை வீணாக்கிவிட்டேனோ என்று அஞ்சுகின்றேன்.

வரவேற்பாளனாக இருக்கின்ற நான் - என் கடைமையைச் செய்ய வேண்டாமா? அதைத்தான் என் அறிவுக்குப் புலப்பட்ட கருத்துக்களைத் தங்கள் முன்பு படைத்தேன்.

திருக்குறள் ஆய்வு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பேரறிஞர்கள் அனைவரும் இனி அவரவர் ஆய்வுக் கருத்துக்களை குற்றாலச் சாரல் பூ மழைபோல திரண்டுள்ள நம்மீது பொழிவார்கள் என்று கூறி உங்களையெல்லாம் வருக வருக என இரு கைகூப்பி வரவேற்கின்றேன் - வணக்கம்.

169